Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"கோடியில் புரள்பவருக்கு 1000 ரூபாய் பிச்சை காசு தான்.. அடக்கி வாசிங்க குஷ்பு".. பொங்கிய அமைச்சர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை கேலி செய்து பேசிய நடிகை குஷ்புவை கண்டித்து அமைச்சர் கீதா ஜீவன் நேற்று வீடியோ வெளியிட்டார். அதில் 'கோடியில் புரள்பவருக்கு ஆயிரம் ரூபாய் பிச்சை காசாகத்தான் தெரியும்' என்று ஆவேசமாக கீதா ஜீவன் கூறியுள்ளார்.

தமிழகத்தில் போதைப் பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி பாஜக சார்பில் நேற்று சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்தில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழகத்தில் உள்ள தாய்மார்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் பிச்சைப் போடுவதால், அவர்களது வாக்குகளைப் பெற்றுவிடலாம் என திமுக நினைத்துக் கொண்டிருக்கிறது" என்றார். நடிகை குஷ்புவின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையானது..

Kalaignar magalir urimai thogai Minister Geetha Jeevan condemned Khushbu s speech

இந்நிலையில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரான கீதா ஜீவனும், நடிகை குஷ்புவின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அமைச்சர் கீதா ஜீவன் பேசுகையில், "முதல்வர் வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டம் குறித்து நடிகை குஷ்பு மிகவும் இழிவாக பேசி இருக்கிறார். குறிப்பாக நமது தமிழக அரசு பெண்களுக்கு வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை தொகையை, அரசு பிச்சை போடுவதாக இழிவுபடுத்தி பேசியுள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகையை பெறுகின்ற ஒரு கோடியே 16 லட்சம் பெண்களையும் குஷ்பு இப்படி இழிவுபடுத்தி பேசி இருப்பது மிகுந்த வருத்தத்தை தருகிறது. பெண்களுடைய வாழ்க்கை நிலையை அறியாதவர் குஷ்பு என்பதை இதன் மூலம் நாம் அறிய முடிகிறது.

நடிகை குஷ்புவுக்கு தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய-நடுத்தர மக்களின் வாழ்க்கை முறையை பற்றி ஏதாவது தெரியுமா?. அந்த 1000 ரூபாய் எவ்வளவு பயன் தருகிறது என்பதை நீங்கள் (குஷ்பு) அறிவீர்களா?. ஒன்றுமே தெரியாமல் வீட்டில் இருந்து வெளியே வந்து மைக்கை பார்த்து பேசுவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

நீங்கள் கோடியில் புரள்பவர். பணவசதி படைத்தவர். பெரிய நடிகை. உங்களுக்கு அந்த ஆயிரம் ரூபாய் அப்படித்தான் தெரியும். இந்த ஆயிரம் ரூபாய் வாழ்வாதாரத்துக்காக, மருத்துவ செலவுக்காக, பிள்ளைகளின் படிப்புக்காக என எத்தனையோ பேருக்கு பலனாக உள்ளது.

இதனை சிலர், 'முதல்வர் ஸ்டாலின் எனக்கு தரும் சீர்' என சொல்கிறார்கள். சில தாய்மார்கள், 'என் பிள்ளைகள் என்னை பார்த்து கொள்ளாவிட்டாலும் மகராசன் முதல்வர் ஸ்டாலின் எனக்கு ஆயிரம் ரூபாய் தந்து என்னை பார்த்து கொள்கிறார்' என சொல்லியிருக்கிறார்..

நீங்கள்(குஷ்பு) உங்கள் போக்குக்கு வார்த்தைகளை இப்படியெல்லாம் பயன்படுத்தாதீங்க. நிச்சயமாக இதற்காக உங்களுக்கு, மகளிர் உரிமைத்தொகை பெறும் ஒரு கோடியே 16 லட்சம் பெண்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். அவர்கள் உங்களை பார்த்து கொள்வார்கள். அடக்கி வாசியுங்கள்" இவ்வாறு அமைச்சர் கீதா ஜீவன் குஷ்புவை கண்டித்து பேசியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+