கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம்! முதற்கட்ட முகாமில் குவிந்த 80 லட்சம் விண்ணப்பங்கள்!
சென்னை: அரசிடமிருந்து மாதம் ரூ.1,000 பெறக்கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இணைய முதற்கட்ட முகாமில் மட்டும்
79.66 லட்சம் விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.
இன்னும் இரண்டாம் கட்ட முகாம் வேறு உள்ளது. நாளை முதல் வரும் 16ஆம் தேதி வரை 2ஆம் கட்ட முகாம் நடைபெறவுள்ளதால் அதில் இன்னும் பல லட்சம் விண்ணப்பங்கள் இந்த திட்டத்தில் இணைய குவியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விண்ணப்பங்களைப் பதிவு செய்யும் முகாமை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த மாதம் 24ஆம் தேதி தருமபுரி மாவட்டம், தொப்பூரில் நடைபெற்ற விழாவில் தொடங்கி வைத்தார்.
விண்ணப்பப் பதிவு முகாம்களை இரண்டு கட்டங்களாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20,765 நியாய விலைக் கடைகளில் இருக்கும் குடும்ப அட்டைகளுக்கு 24.07.2023 முதல் 04.08.2023 வரை விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெற்றன. இதில் முதற்கட்ட விண்ணப்ப பதிவு முகாம் இன்று நிறைவடைய உள்ள நிலையில் இந்த முதற்கட்ட முகாமில் விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம் நேற்றும், இன்றும் நடைபெற்றது.
நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமில் 2,63,472 பேர் விண்ணப்பித்துள்ளார்கள். இந்த முதற்கட்ட முகாம் நடைபெறும் பகுதிகளில் இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் சிறப்பு முகாமை பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இதுவரை முதற்கட்ட முகாமில் 79.66 இலட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட முகாம்கள் 05.08.2023 முதல் 16.08.2023 வரை நடைபெறவுள்ளன.












Click it and Unblock the Notifications