Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கள்ளக்குறிச்சி: குறவர் சமூகம் சக்திவேல் உட்பட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கள்ளக்குறிச்சியில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 3 நாட்களுக்குப் பின்னர் குறவர் சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13 கொள்ளை வழக்குகளுக்காக எஞ்சிய 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என போலீசார் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. ஆனால் இன்று பகல் வரை 2 பேர்தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் மாலையில் கர்ப்பிணியின் கணவர் சக்திவேல், கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Recommended Video

    கள்ளக்குறிச்சி அருகே இன்னொரு நிஜ ஜெய்பீம்? | Oneindia Tamil

    கள்ளக்குறிச்சி அருகே மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 5 பேர் கடந்த 14-ந் தேதி போலீசாரால் அடித்து உதைத்து விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும் கடந்த 3 நாட்களாக போலீசார் அழைத்துச் சென்ற 5 பேரும் எங்கே இருக்கின்றனர் என்கிற தகவல் தெரியவில்லை எனவும் அவர்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் புகார் மனு அளித்தனர்.

    இவர்களில் சக்திவேல் என்பவரின் கர்ப்பிணி மனைவி தம்மை தாக்கிவிட்டு போலீசார் இழுத்துச் சென்றதாக கூறியிருந்தார். இந்த சம்பவங்கள் அனைத்துமே அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையாகி இருக்கக் கூடிய ஜெய்பீம் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளை நினைவுபடுத்துவதாக இருந்ததால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

    ஜெய்பீம் போல...

    ஜெய்பீம் போல...

    ஜெய்பீம் திரைப்படத்தில் கர்ப்பிணி செங்கேணி, போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட கணவர் ராஜாக்கண்ணு என்ன ஆனார் என தெரியாமல் போலீசாரின் துன்புறுத்தலுக்குள்ளானார். பின்னர் வழக்கறிஞர் சந்துருவின் முயற்சியால் ராஜாக்கண்ணு போலீசாரால் அடித்து கொல்லப்பட்டார் என்பது அம்பலமானது. தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இந்த சம்பவம்தான் ஜெய்பீம் திரைப்படம்.

    கொள்ளையில் 3 பேர்

    கொள்ளையில் 3 பேர்

    இந்த நிலையில் இந்த செய்திகளை நாம் பதிவு செய்து போலீசாரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்துள்ள போலீசார், 13 கொள்ளை வழக்குகள் தொடர்பாகவே 5 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினோம். இவர்களில் 3 பேரின் கைரேகைகள் கொள்ளை சம்பவங்களில் எடுக்கப்பட்ட கைரேகைகளுடன் ஒத்துப் போகின்றன.

    3 பேரை ஆஜர்படுத்துவோம்

    3 பேரை ஆஜர்படுத்துவோம்

    இதனால் இந்த 3 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவர். எஞ்சிய 2 பேரும் விடுவிக்கப்பட்டு அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதற்கான ஆதாரங்களாக புகைப்படங்களும் வெளியிட்டிருக்கிறோம் என்றனர். அந்த புகைப்படங்களையும் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

    கர்ப்பிணியின் கணவர் கதி என்ன?

    கர்ப்பிணியின் கணவர் கதி என்ன?

    இந்த நிலையில் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் போலீசார் கூறியபடி 3 பேரில் 2 பேர் மட்டுமே ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். கர்ப்பிணியின் கணவரான சக்திவேல் மட்டும் ஆஜர்படுத்தப்படவில்லை. இதனால் சக்திவேலுக்கு என்ன ஆனது? என அவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

    கர்ப்பிணியின் கணவர் ஆஜர்

    கர்ப்பிணியின் கணவர் ஆஜர்

    இந்த நிலையில் இன்று இரவு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சக்திவேலுவையும் போலீசார் ஆஜர்படுத்தினர். இவர்கள் மூவர் மீதும் 13 வழக்குகள் போடப்பட்டுள்ளன. மூவரும் கள்ளக்குறிச்சி கிளை சிறை சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+