கள்ளக்குறிச்சி: குறவர் சமூகம் சக்திவேல் உட்பட 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைப்பு
சென்னை: கள்ளக்குறிச்சியில் போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டு 3 நாட்களுக்குப் பின்னர் குறவர் சமூகத்தைச் சேர்ந்த 2 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும் 13 கொள்ளை வழக்குகளுக்காக எஞ்சிய 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என போலீசார் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. ஆனால் இன்று பகல் வரை 2 பேர்தான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர் மாலையில் கர்ப்பிணியின் கணவர் சக்திவேல், கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Recommended Video
கள்ளக்குறிச்சி அருகே மலைக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த 5 பேர் கடந்த 14-ந் தேதி போலீசாரால் அடித்து உதைத்து விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டினர். மேலும் கடந்த 3 நாட்களாக போலீசார் அழைத்துச் சென்ற 5 பேரும் எங்கே இருக்கின்றனர் என்கிற தகவல் தெரியவில்லை எனவும் அவர்கள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோரிடம் புகார் மனு அளித்தனர்.
இவர்களில் சக்திவேல் என்பவரின் கர்ப்பிணி மனைவி தம்மை தாக்கிவிட்டு போலீசார் இழுத்துச் சென்றதாக கூறியிருந்தார். இந்த சம்பவங்கள் அனைத்துமே அண்மையில் வெளியாகி பெரும் சர்ச்சையாகி இருக்கக் கூடிய ஜெய்பீம் திரைப்படத்தில் இடம்பெற்ற காட்சிகளை நினைவுபடுத்துவதாக இருந்ததால் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ஜெய்பீம் போல...
ஜெய்பீம் திரைப்படத்தில் கர்ப்பிணி செங்கேணி, போலீசாரால் அழைத்துச் செல்லப்பட்ட கணவர் ராஜாக்கண்ணு என்ன ஆனார் என தெரியாமல் போலீசாரின் துன்புறுத்தலுக்குள்ளானார். பின்னர் வழக்கறிஞர் சந்துருவின் முயற்சியால் ராஜாக்கண்ணு போலீசாரால் அடித்து கொல்லப்பட்டார் என்பது அம்பலமானது. தமிழகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இந்த சம்பவம்தான் ஜெய்பீம் திரைப்படம்.

கொள்ளையில் 3 பேர்
இந்த நிலையில் இந்த செய்திகளை நாம் பதிவு செய்து போலீசாரின் கவனத்துக்கு கொண்டு சென்றோம். இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்துள்ள போலீசார், 13 கொள்ளை வழக்குகள் தொடர்பாகவே 5 பேரையும் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினோம். இவர்களில் 3 பேரின் கைரேகைகள் கொள்ளை சம்பவங்களில் எடுக்கப்பட்ட கைரேகைகளுடன் ஒத்துப் போகின்றன.

3 பேரை ஆஜர்படுத்துவோம்
இதனால் இந்த 3 பேர் மட்டுமே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறைக்கு அனுப்பி வைக்கப்படுவர். எஞ்சிய 2 பேரும் விடுவிக்கப்பட்டு அவர்களது குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இதற்கான ஆதாரங்களாக புகைப்படங்களும் வெளியிட்டிருக்கிறோம் என்றனர். அந்த புகைப்படங்களையும் போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

கர்ப்பிணியின் கணவர் கதி என்ன?
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் போலீசார் கூறியபடி 3 பேரில் 2 பேர் மட்டுமே ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். கர்ப்பிணியின் கணவரான சக்திவேல் மட்டும் ஆஜர்படுத்தப்படவில்லை. இதனால் சக்திவேலுக்கு என்ன ஆனது? என அவரது உறவினர்கள் நீதிமன்றத்தில் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

கர்ப்பிணியின் கணவர் ஆஜர்
இந்த நிலையில் இன்று இரவு கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் சக்திவேலுவையும் போலீசார் ஆஜர்படுத்தினர். இவர்கள் மூவர் மீதும் 13 வழக்குகள் போடப்பட்டுள்ளன. மூவரும் கள்ளக்குறிச்சி கிளை சிறை சாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications