அதிமுகவில் ஒரு பெண் மாவட்ட செயலாளர் கூட இல்லையே.. ஓபிஎஸ், சசிகலா மீது கமல்ஹாசன் அட்டாக்
சென்னை: அதிமுகவில் ஒரு பெண் மாவட்ட செயலாளர் கூட இல்லையே என மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் சாடியுள்ளார்.
இது தொடர்பாக இன்று தமது ட்விட்டர் பக்கத்தில் கமல்ஹாசன் பதிவிட்டுள்ளதாவது:

இரண்டரை ஆண்டுகள் ஆண்கள், இரண்டரை ஆண்டுகள் பெண்கள் ஆள வேண்டும் என திடீர் பெண்ணுரிமைப் பேசுபவரின் கட்சியில் ஒரு மாவட்ட செயலாளர் கூட பெண் இல்லை.
மக்கள் நீதி மலரும் போது குறைந்தது 20 பெண் அமைச்சர்கள் இருப்பார்கள்.
எவர் ரிலீஸையும் மனதில் வைத்து இதை நான் சொல்லவில்லை. இவ்வாறு கமல்ஹாசன் பதிவிட்டுள்ளார்.

இரண்டரை ஆண்டுகள் ஆண்கள், இரண்டரை ஆண்டுகள் பெண்கள் ஆள வேண்டும் என அண்மையில் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசியிருந்தார். மேலும் ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து அடுத்த மாதம் சசிகலா விடுதலையாக உள்ளார்.
ஓபிஎஸ், சசிகலா ஆகியோரது பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக தமது ட்விட்டர் பக்கத்தில் சாடியிருக்கிறார் கமல்ஹாசன்.












Click it and Unblock the Notifications