எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவிற்கு கமல்ஹாசன் இரங்கல்
Recommended Video
சென்னை: எழுத்தாளர் பிரபஞ்சன் மறைவிற்கு, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர், கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சாகித்ய அகாடமி விருதுப்பெற்ற பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் இன்று காலமானார். புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு வயது 73.
வானம் வசப்பட்ட திரு.பிரபஞ்சனுக்கு பூமி வசதிப்படாததால் காலமானார். அவர் எழுத்துக்கள் எப்போதும் நம்முடன். நன்றி சொல்வோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 21, 2018
பல்வேறு தலைவர்களும் பிரபஞ்சன் மறைவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட ட்வீட்டில் "வானம் வசப்பட்ட திரு.பிரபஞ்சனுக்கு பூமி வசதிப்படாததால் காலமானார். அவர் எழுத்துக்கள் எப்போதும் நம்முடன். நன்றி சொல்வோம்" என்று அவர் கூறியுள்ளார்.
புதிதாய் எழுதும் படைப்பாளியையும் தமிழாகவே வாரி அணைத்துக்கொள்ளும் ஒப்பற்ற படைப்பாளி. அவரது
— UMADEVI (@Poet_UmaDevi) December 21, 2018
"#துவராடைக்குள் மறைந்த காதல் மனம்" நூளுல் நான் நேசித்த பெண்களை அவர்களின் கண்ணியத்தோடே எழுதிய அற்புதக்கலைஞன். தமிழ் பண்பாடு இழந்த ஒரு தமிழ்க்கலைஞன். #பிரபஞ்சன் #Prapanchan. pic.twitter.com/GVs6LdVGTk
கவிஞர் உமாதேவி வெளியிட்ட ட்வீட்டில், "புதிதாய் எழுதும் படைப்பாளியையும் தமிழாகவே வாரி அணைத்துக்கொள்ளும் ஒப்பற்ற படைப்பாளி. அவரது "#துவராடைக்குள் மறைந்த காதல் மனம்" நூளுல் நான் நேசித்த பெண்களை அவர்களின் கண்ணியத்தோடே எழுதிய அற்புதக்கலைஞன். தமிழ் பண்பாடு இழந்த ஒரு தமிழ்க்கலைஞன். #பிரபஞ்சன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.