சட்டசபை தேர்தல் 2021.. மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன் மெகா பிளான்!
சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்த முறை சென்னையில் உள்ள ஒரு தொகுதி மற்றும் கோவையில் உள்ள ஒரு தொகுதி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Recommended Video

கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி தொடங்கி 4 ஆண்டுகள் ஆகிவிட்டது. அந்த கட்சி சந்திக்கும் முதல் சட்டசபை தேர்தல் என்றால் அது இந்த ஆண்டு நடக்கும் தேர்தல் தான். முன்னதாக நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட்டது.
நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி 3.73 சதவீதம் வாக்குகளைப் பெற்றது. கோவை, சென்னை உள்பட நகர்புற பகுதிகளில் அதிக வாக்குகளை கமலின் கட்சி பெற்றது.

வேளச்சேரி மயிலாப்பூர்
இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இந்த முறை சென்னையில் உள்ள ஒரு தொகுதி மற்றும் கோவையில் உள்ள ஒரு தொகுதி என இரண்டு தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக சொல்கிறார்கள். வேளச்சேரி, மயிலாப்பூர் அல்லது ஆலந்தூர் ஆகிய தொகுதிகளில் ஏதேனும் ஒன்றிலும், கோவை, மாவட்டத்தில் ஒரு தொகுதி என போட்டியிட திட்டமிட்டு அதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

அதிக வாக்குகள்
தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 1 லட்சத்து 35 ஆயிரத்து 465 வாக்குகளைப் பெற்று, மக்கள் நீதி மய்யம் மூன்றாம் இடத்தை பெற்றது. கட்சி ஆரம்பித்த சில மாதங்களிலேயே 12.03 சதவீத வாக்குகளை இங்கு பெற்றிருந்தது. எனவே தென்சென்னை நாடாளுமன்ற தொகுதிக்கு உள்பட்ட வேளச்சேரி அல்லது மயிலாப்பூர் கமல் போட்டியிட திட்டமிடுவதாக சொல்லப்படுகிறது.

ஸ்ரீபெரும்புதூர்
இதுமட்டுமின்றி சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்றத் தொகுதியிலும் கமலின் மக்கள் நீதிமய்யம் 1 லட்சத்து 35 ஆயிரத்து 525 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடம் பிடித்திருந்தது. குறிப்பாக ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதியில் அதிக வாக்குகளை பெற்றிருந்தது. எனவே அங்கும் கமல்ஹாசன் போட்டிட வாய்ப்புகள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

மநீம
சென்னையில் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டுள்ள கமல்ஹாசன், கோவையில் உள்ள ஒரு தொகுதியிலும் போட்டியிட உள்ளதாக சொல்லப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் மகேந்திரன் கோவை நாடாளுமன்றத் தொகுதியில்தான் போட்டியிட்டார் அங்கு 1 லட்சத்து 45 ஆயிரத்து 104 வாக்குகளை மக்கள் நீதி மய்யம் பெற்றது. என அதனால், கமல்ஹாசன் போட்டியிடும் மற்றொரு தொகுதி கோவையில்இருக்க வாய்ப்பு உள்ளதாக அக்கட்சியினர் சொல்கிறார்கள்.

இளைஞர்கள்
மக்கள் நீதி மய்யம் சார்பில் கடந்த 21-ம் தேதி விருப்பமனு விநியோகம் தொடங்கி நடந்து வருகிறது. கமல்ஹாசன் நகர்புற வாக்காளர்களிடையே அதிக நம்பிக்கையை பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. மாற்றத்தை விரும்பும் இளைஞர்கள் வாக்குகள், புதிய வாக்காளர்கள் ஆகியோரின் வாக்குகளை குறிவைத்து கமல் செயல்படுவதாக கூறப்படுகிறது. எனவே அதற்கு தகுந்தாற் போல் கமலின் வியூகங்கள் இருக்க வாய்ப்பு உள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications