6 தொகுதிகள் போதும்.. திமுகவிடம் பேச தயாராகும் கமல்ஹாசன்.. மீண்டும் கோவை தெற்கில் களமிறங்கும் மநீம?
சென்னை: திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி 6 தொகுதிகளில் கட்டாயம் போட்டியிடும் முடிவில் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கட்சியை வளர்க்க சொந்த சின்னமான டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்பதிலும் பிடிவாதமாக இருப்பதாக விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
சட்டசபைத் தேர்தல் நெருங்கிட்ட சூழலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை தவிர்த்து மற்ற அத்தனை கட்சிகளும் இணக்கமாக இருந்து வருகின்றன. தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் முடிவடைந்த பின் பிப்ரவரி 22ஆம் தேதி முதல் திமுக தரப்பில் கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக கூட்டணி
காங்கிரஸ் கட்சியினர் ஆட்சியில் பங்கு தொடர்பாக பேசி வரும் சூழலில், தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது என்று முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்திருக்கிறார். அதேபோல் விசிக, மதிமுக, சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளும் இம்முறை கூடுதல் தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். காங்கிரஸ் கட்சி விலகினால், அவர்களுக்கு அதிக தொகுதிகள் கிடைக்கலாம் என்று கருதப்படுகிறது.
மநீம பொதுக்குழு
இதனிடையே லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்தது. அப்போது நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் ராஜ்ய சபா சீட் மட்டும் பெற்றுக் கொண்டது. இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் தீவிரம் காட்டுகின்றனர். அண்மையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
புலம்பிய கமல்ஹாசன்
இந்த கூட்டத்தில் கமல்ஹாசன் பேசுகையில், பூத் கமிட்டி கூட அமைக்க முடியவில்லையே.. நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி என்று சோகம் அடைந்திருக்கிறார். இதனால் மநீம கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அப்போது நிர்வாகிகள் தரப்பில் எங்களை திட்டினால் மட்டும் போதாது.. கட்சி சார்பாக போராட்டம், ஆர்ப்பாட்டங்களை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர்.
6 தொகுதிகள்
அதேபோல் சட்டசபைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் 6 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்றும், சொந்த சின்னமான டார்ச் லைட் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்றும் வலியுறுத்தி இருக்கின்றனர். இதனை கமல்ஹாசனும் ஏற்றுக் கொண்டிருக்கிறார். அதற்கேற்ப மயிலாப்பூர், வேளச்சேரி, விருகம்பாக்கம், ஆலந்தூர், கோவை தெற்கு, மதுரை மத்திய தொகுதிகளை கேட்க கமல்ஹாசன் தயாராகி வருவதாக தெரிய வந்துள்ளது.
-
திமுக ஆட்சியில் 6 மாதம் மும்மொழிக் கொள்கை! அமெரிக்காவில் அண்ணா சொன்ன விளக்கம்! -
200+ உறுதி.. சிதறிய எதிர்க்கட்சிகள்... ஜாலியாக 'ஸ்வீப்' செய்யும் திமுக? பாலி மார்க்கெட் பரபர கணிப்பு -
இந்த நாளுக்காகத் தான் வெயிட்டிங்! திருச்சியை திணற வைக்கும் திமுக! ஸ்டாலின் கையில் ‘மெகா’ அஸ்திரம்! -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்! -
க்ளோஸ்.. சுள்ளென சுட்டெரிக்கும் உதயசூரியன்.. சூடான தேர்தல் களம்! அடுத்த கட்டத்துக்கு நகர்ந்த திமுக! -
காங்கிரஸ் போட்டியிடும் 28 தொகுதிகள் என்னென்ன? டெல்லி தலைகளுடன் சென்னையில் நடந்த முக்கிய ஆலோசனை! -
UPSC தேர்வு.. தமிழ்நாட்டில் இருந்து வென்ற 60 பேரில்.. 56 பேர் நான் முதல்வன் திட்டத்தில் பயின்றவர்கள் -
மீண்டும் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? உதயநிதி ஸ்டாலின் கொடுத்த சூசக பதில்! -
இதே திருச்சியில் பெண்களுக்கு ரூ.1000 அறிவிப்பை வெளியிட்டேன்.. திருச்சி மாநாட்டுக்கு ஸ்டாலின் அழைப்பு -
PTRக்கு எதிராக புரட்சிப் படை? பத்திகிட்டு எரியுது மதுரை! களத்துக்கு வந்த மாப்பிள்ளை! பரபர பாலிடிக்ஸ் -
புதுச்சேரி கூட்டணியில் குஸ்தி.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2 இடங்களில் தனித்து போட்டி.. திமுக ஷாக்!












Click it and Unblock the Notifications