மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து அடுத்தடுத்து நீக்கப்படும் நிர்வாகிகளால் பரபரப்பு
சென்னை: மாவட்ட பொறுப்பாளர்களையும் கட்சி நிர்வாகிகளையும் கமல் மதிப்பதில்லை என மக்கள் நீதி மய்யத்திலிருந்து நீக்கப்பட்ட விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசகம் குற்றம்சாட்டியுள்ளார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் சீனிவாசன் நீக்கப்பட்டார். இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் மாவட்ட பொறுப்பாளர்களையும் கட்சி நிர்வாகிகளையும் கமல் மதிப்பதில்லை.
தேர்தல் முடிவதற்குள் ஏராளமான நிர்வாகிகள் கமல் கட்சியிலிருந்து வெளியே வருவர். நான் திமுகவில் இணைய போவது தெரிந்துதான் கமல் என்னை நீக்கினார் என்றார் சீனிவாசகம்.
மக்கள் நீதி மய்யம்
இது போல் திருநெல்வேலி மேற்கு மாவட்ட பொறுப்பாளர் கருணாகரராஜா, நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் செந்தில்குமார் ஆகியோர் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுவிட்டனர்.
வன்னியர்களின் ரத்தத்தை உறிஞ்சி ஏமாற்றிவிட்டார்.. ராமதாஸ் மீது வேல்முருகன் பகீர் புகார்!
கமல் மீது புகார்
முன்னதாக சிதம்பரம், கடலூர் மாவட்ட பொறுப்பாளர் குமரவேல் நீக்கப்பட்டார். இவர் செய்தியாளர்களை சந்தித்து எங்களை கோவை சரளா நேர்காணல் நடத்துவதா என கேள்வி எழுப்பியிருந்தார். மேலும் கமலை சுற்றியுள்ளவர்கள் கட்சியை தவறாக வழிநடத்துகிறார்கள் என்றார்.
அதிர்ச்சி
லோக்சபா தேர்தல் நடந்து வரும் நிலையில் இவ்வாறு ஒவ்வொரு நிர்வாகியாக நீக்கப்பட்டு வருவது மற்ற நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பிரச்சினை என வந்தால் அதை கமலிடம் கூட முறையிட முடியாதபடி நிர்வாகிகள் தடுத்து நிறுத்தப்படுவதாக கூறப்படுகிறது.
காது கொடுத்து கேட்க
இது போல் ஒவ்வொருவரும் கட்சியிலிருந்து நீக்கப்படுவதும் கட்சியை விட்டு விலகுவதும் இருப்பது கட்சியின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல என நிர்வாகிகள் கருதுகின்றனர். மேலும் அதிருப்தியாளர்களின் பிரச்சினையை கட்சி தலைமை காது கொடுத்து கேட்க வேண்டும் என்பதே இவர்களின் கோரிக்கையாகும்.