Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கமல்ஹாசன் அப்படி என்ன பேசினார்.. அகரம் விழாவில் நடந்தது என்ன.. பாஜக எதிர்ப்பது ஏன்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் 20வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. அந்த அமைப்பின் விழாவில் நடிகரும், மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன் கலந்து கொண்டார். அகரம் விழாவில் கமல்ஹாசன் பேசும் போது, சர்வாதிகாரம், சனாதன சங்கிலிகளை உடைக்கும் ஒரே ஆயுதம் கல்வி தான். கல்வி தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள். அதில் வெல்ல முடியாது என்று கூறியிருந்தார். சனாதனம் குறித்து கமல்ஹாசனின் பேச்சு வடமாநிலங்களில் உள்ள சனாதன ஆதரவாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷன் 20வது ஆண்டிலும், அதன் விதைத் திட்டம் 15வது ஆண்டிலும் அடியெடுத்து வைத்துள்ளது.அகரம் பவுண்டேஷனால் பலன் பெற்ற பலர் சென்னையில் நேற்று நடந்த இந்த விழாவில் பங்கேற்றனர். இந்த விழாவினை நடிகர் சூர்யா, கார்த்தி, ஜோதிகா, சிவக்குமார் என அவர்களது குடும்பத்தினர் நடத்தினார்கள். இதில் சிறப்பு விருந்தினராக நடிகர் கமல்ஹாசன் எம்பி, இயக்குனர் வெற்றிமாறன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Kamal Haasan Surya Agaram

டாக்டர்கள்

நடிகர் கமல்ஹாசன் விழாவில் பேசுகையில்," இந்த மேடையில் பார்த்த டாக்டரை அடுத்த வருடம் பார்க்க இயலாது. இப்போதைய டாக்டர்கள் மாதிரி அடுத்த ஆண்டு விழாவில் டாக்டர்களை காட்ட இயலுமா? என்பதில் சின்ன சந்தேகம் உள்ளது.ஏனென்றால் 2017 க்கு (நீட்தேர்வுக்கு பிறகு) பிறகு இவர்களால் இந்த முயற்சியை தொடங்க முடியவில்லை. ஏன் நீட் வேண்டாம் என்று சொன்னோம் என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும்.

சனாதன சங்கிலி

2017ம் ஆண்டு முதல் இன்றைய தேதி வரை மருத்துவ கல்வி கிடைக்காமல் செய்துவிட்டது இந்த நீட் சட்டம். அகரம் நினைத்தால் ஒன்று செய்ய முடியாது. அந்த சட்டத்தை மாற்றி எழுதக்கூடிய பலத்தை தருவது கல்வி தான். அந்த கல்வி இந்த போரில் ஆயுதமின்றி நாட்டையே செதுக்க வல்லது. சர்வாதிகாரம், சனாதன சங்கிலிகளை எல்லாம் உடைக்கக்கூடிய ஒரே ஆயுதம் கல்வி தான்.

கல்வி ஆயுதம்

கல்வியை தவிர வேறு எதையும் கையில் எடுக்காதீர்கள். அதில் வெல்ல முடியாது. ஏனென்றால் பெரும்பான்மை உங்களை தோற்கடித்துவிடும். பெரும்பான்மை மூடர்கள் உங்களை தோற்கடித்து விடுவார்கள். அறிவு தோற்றுப்போய்விடும். இதை தாங்கி பிடிக்க வேண்டும். நின்று ஆண்டு கொண்டு இருப்பது தலைமை அல்ல. அதை புரிந்து கொள்ள எனக்கு 70 வயது ஆகிவிட்டது. இப்போது நான் சொல்கிறேன். நேற்று நான் முதலமைச்சருடன் பேசி கொண்டிருந்தேன். இந்த என்ஜிஓக்களை பெரிதாக ஆதரிக்க வேண்டும். அவர்கள் பண உதவி கேட்பது இல்லை. அனுமதி கேட்கிறார்கள். அதில் நமக்கு என்ன வலிக்க போகிறது என்று கூறினேன். கொடுத்துருங்க அய்யா என்றேன். அதற்கு அவர் செய்து கொண்டு இருக்கிறோம் என்றார். நாங்கள் செய்யத்தான் போகிறோம்.. செய்துக்கொண்டிருக்கிறோம் என்றார். அந்த பெருமையோடு தான் இங்கு வந்தேன் " என்று கூறினார்.

பாஜக எதிர்ப்பு

கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு வட மாநில பாஜக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதேபோல் வடமாநிலங்களில் உள்ள பலரும் எதிர்ப்பு தெரிவித்து கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள தியோரியா மக்களவைத் தொகுதி எம்பி சாசாங்க் மணி திரிபாதி எதிர்ப்பு தெரிவித்து கூறுகையில், "கமல்ஹாசனுக்கு நான் ஒரு விஷயத்தை நினைவூட்ட விரும்புகிறேன். 5,000 ஆண்டுகளுக்கு முன்பு ஹரப்பா, மொஹஞ்சதாரோ மற்றும் தோலாவிராவின் கலாச்சாரத்தில் இருந்து, புத்தர் மற்றும் ராமச்சந்திரர் சம்பந்தப்பட்ட பாரம்பரியம் அழியாமல் இருந்து வருகிறது. இந்த நாகரிகம் ஒருபோதும் அழிக்கப்படவில்லை. எகிப்து மற்றும் சிரியா அழிக்கப்பட்டன, ஆனால் இந்தியா அழியவில்லை. இதற்கு சனாதன தர்மமும் நமது மகான் சாதுக்களும் தான் காரணம். நமது கல்வி, நமது கலாச்சாரத்துடன் இணைந்து இருக்க வேண்டும்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+