தன் நம்பிக்கைகளை.. பிறர் மேல் திணிக்காமல்.. காயப்படுத்தாமல்.. கமல் "பளிச்" அறிக்கை!
சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இறை நம்பிக்கை மற்றும் கந்தசஷ்டி கவசம் தொடர்பாக ஒரு டிவீட் போட்டுள்ளார். தனது ஸ்டைலில் புரிந்தும், புரியாதது போலவும் உள்ள அந்த டிவீட்டில் அவர் அவரவர் நம்பிக்கையை அடுத்தவர் மேல் திணிக்காமல் பிறரைக் காயப்படுத்தாமல் இணைந்து வாழும் சமூகம் இது என்று அவர் கூறியுள்ளார்.
Recommended Video
கந்தசஷ்டி கவசத்தை நிந்திப்பது போல பேசிய வீடியோவால் பெரும் சர்ச்சை வெடித்து இன்று கருப்பர் கூட்டம் என்ற யூடியூப் சானல் நடவடிக்கைக்குள்ளாகியுள்ளது. இதன் எதிரொலியாக பெரியார் சிலை அவமதிக்கப்பட்டது. அதன் எதிரொலியாக இந்துக் கோவில்கள் சில தாக்கப்பட்டுள்ளன.

மத ரீதியான இந்த மோதல்களால் தமிழகத்தில் அமைதி நிலவ வேண்டும் என்று விரும்புவோர் வருத்தமடைந்துள்ளனர், கவலை அடைந்துள்ளனர். எங்கு பார்த்தாலும் துவேஷமும், வெறுப்பும் தலைவிரித்தாடுகிறது. இதைத்தான் என்று கமல்ஹாசன் ஒரு டிவீட் போட்டு தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
கமல்ஹாசன் போட்ட டிவீட் இதுதான்:
"தன் நம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் காயப்படுத்தாது இயைந்து வாழும் சமூகம் தான் அறிவார்ந்த, மேம்பட்ட சமூகம். இன்று நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது"

அடுத்தவர் நம்பிக்கையை காயப்படுத்தாதீங்க. உங்க நம்பிக்கையை அடுத்தவர் மேல் திணிக்காதீங்க. ஒவ்வொருவரும் அடுத்தவரின் நம்பிக்கைகளை அவமதிக்காதீங்க. அப்படி செய்யப்படும் முயற்சிகளால் தமிழர்களின் ஒற்றுமை பாதிக்கப்படும். ஆனால் தமிழர்கள் அதற்கு இடம் தரக் கூடாது, அந்த முயற்சிகள் பலிக்காது என்பதே கமல்ஹாசனின் டிவீட்டின் சாராம்சமாகும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications