சொந்த ஊரான ராமநாதபுரத்தில் கமல் போட்டி? மக்கள் நீதி மய்ய நிர்வாகிகள் அழுத்தம்
Recommended Video

சென்னை:மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமலஹாசன் சொந்த மாவட்டமான ராமநாதபுரம் தொகுதியில் நிற்க திட்டமிட்டிருப்பதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கமலஹாசன் தான் பிறந்த ராமநாதபுரம் மாவட்ட மண்ணில், மறைந்த முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து 21.02.2018ல் அரசியல் பயணத்தை தொடங்கினார். தற்போது கட்சி தொடங்கி ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது.
இதையடுத்து, மாநிலம் முழுவதும் கட்சி தொடர்பான நிகழ்ச்சிகளில் தீவிரமாக களம் இறங்கி தொண்டர்களை சந்தித்து வருகிறார். லோக்சபா தேர்தலை முன் வைத்து அவர் மேற்கொண்டு பிரச்சாரத்தை அதிமுக, திமுக உள்ளிட்ட மற்ற கட்சியினர் உற்று நோக்கி வருகின்றனர்.

தனித்து களம் காணும் கமல்
லோக்சபா தேர்தலில் எந்த கூட்டணியிலும் சேராமல், 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட கமல் முடிவு செய்துள்ளார் என்று அவரது கட்சி உறுப்பினர்கள் கூறி வருகின்றனர். இதைத்தொடர்ந்து விருப்ப மனு பெறும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

கட்சியினர் மனு
அதில் ராமநாதபுரம் தொகுதியில் கமல் நிற்க வேண்டும் என்று கட்சி உறுப்பினர்கள் பலர் மனு அளித்து வருகின்றனர். இதுகுறித்து கட்சியினர் கூறி இருப்பதாவது:

அரசியல் விமர்சனம்
புதிய கட்சி, அரசியல் குழந்தை என்று கமலஹாசன் மீது பல்வேறு தருணங்களில் தொடர்ச்சியாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. கிராமசபை கூட்டங்களின்போது மக்கள் தரும் உற்சாகமே அவருக்கு தேர்தலில் தனித்து போட்டியிடும் துணிச்சலை தந்திருக்கிறது.

வலியுறுத்தி வருகிறோம்
அவரை ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுமாறு வலியுறுத்தி வருகிறோம். சொந்த மாவட்டம்... அதோடு கமலின் தந்தை டி.சீனிவாசன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.

கட்சியினர் நம்பிக்கை
சிறந்த வழக்கறிஞர். மக்களிடையே நன்மதிப்பு பெற்றவர். எனவே, கமல் இத்தொகுதியில் வெற்றிபெற்றால் மக்களுக்கு பல பயனுள்ள திட்டங்களை கொண்டு வருவார் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே, ராமநாதபுரம் தொகுதியில் கமல் போட்டியிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம் என்று அவர்கள் கூறினர்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications