ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர்- கனிமொழி புகழாரம்
Recommended Video
சென்னை: ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றவர் என கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதாவின் இரண்டாவது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி அதிமுகவினர், அமமுகவினர், ஜெ.தீபா, திவாகரன் ஆகியோர் மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதா என்றாலே அவர் ஒரு இரும்பு பெண் என்பது அனைவருக்கும் தெரியும். அவரது பேச்சாற்றல், அதிரடி, பன்முக திறமை ஆகியவற்றுக்கு பெயர் பெற்றவர். இப்படிப்பட்ட ஜெயலலிதாவின் ஆட்சியில் சில குறைகள், விமர்சனங்கள் இருந்தாலும் எதிர்க்கட்சியினரையும் பிரமிக்க வைத்தவர் என்பது கனிமொழியின் டுவீட்டில் இருந்து நன்றாக தெரிகிறது.
ஜெயலலிதா நினைவு தினத்தில் கருணாநிதியின் மகளும் திமுக எம்பியுமான கனிமொழி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறுகையில் ஒரு பெண்ணாக இருந்து அரசியலில் வெற்றி பெறுவது எளிதல்ல.
Surviving as a woman in a male dominated political world is not an easy task. Late ADMK Chief Jayalalitha confronted the challenges and proved successful. The lack of clarity shrouding her final days are very unfortunate and not befitting the leader she was.
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 5, 2018
மறைந்த முதல்வர் ஜெயலலிதா அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றார். ஆனால் அவரின் இறுதி நாட்களில் அவர் மரணம் தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சைகள் துரதிருஷ்டவசமானது என்று தெரிவித்துள்ளார்.