Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கண்ணாடி இழைப் பாலத்தில் விழுந்த சுத்தியல்.. விரிசலுக்கு காரணம் இது தான்! அமைச்சர் எவ வேலு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் சிலைக்கு இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி பாலம் சேதமடைந்துள்ளதாகவும் அதில் விரிசல் ஏற்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் அந்த பாலம் உறுதியாக இருப்பதாகவும், ஒரே நேரத்தில் 650 பேர் கூட நிற்கலாம் என விளக்கம் அளித்துள்ளார் தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சரான எ.வ.வேலு.

தமிழகத்தின் கடைக்கோடியில் இருக்கும் புகழ்பெற்ற சுற்றுலா மாவட்டம் கன்னியாகுமரி. கடற்கரைப் பகுதிகளில் அமைந்திருக்கும் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளைக் காண்பதற்காகவே அங்கு ஆயிரக்கணக்கான பயணிகள் நாள்தோறும் வருகின்றனர்.

குறிப்பாக கன்னியாகுமரி கடற்கரையில் அமைந்திருக்கும் திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறையைக் காண்பதற்காகவே அங்கு அதிக பயணிகள் வருகின்றனர். மேலும் அங்கிருந்து சூரியன் உதிப்பதையும் மறைவதையும் பார்த்து ரசிக்க முடியும் என்பதால் அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

Kanyakumari Glass Bridge Crack

கன்னியாகுமரி பாலம்

இந்த நிலையில் கன்னியாகுமரிக்கு மேலும் புகழ் சேர்க்கும் வகையில் திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் பாறை இடையே கண்ணாடி இழைப் பாலம் அமைக்கப்பட்டது. அதனை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். இயற்கை எழில் கொஞ்சும் கடல் பகுதியில் கண்ணாடி பாலத்தின் மேல் நடப்பது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. இதை அடுத்து அந்த பாலத்தில் பயணிப்பதற்காகவே அங்கு சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கினர். இந்த நிலையில் திடீரென கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டிருந்தது. பாலத்தின் உறுதித்தன்மை குறித்து அதிமுகவும் குற்றம் சாட்டிய நிலையில் தற்போது அமைச்சர் எ.வ.வேலு இது தொடர்பாக விளக்கம் அளித்திருக்கிறார்.

கண்ணாடி இழைப் பாலம்

இதுதொடர்பாகப் பேசிய அவர், "கண்ணாடிப் பாலம் ரூ.37 கோடி திட்ட மதிப்பீட்டில் உருவாக்கப்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர். இந்தப் பாலம் கடல் பரப்பில் கட்டப்பட்டுள்ளதால் அவ்வப்பொழுது சிறு, சிறு பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அப்படி, பராமரிப்புப் பணியில் இருந்தபோது, சுத்தியல் தவறி கீழே விழுந்ததில் பாலத்தில் சிறு கீறல் ஏற்பட்டது. பாலத்தில் உடைப்பு என்பது ஏற்படவில்லை.

தவறான தகவல்

ஆனால் இந்த அரசைப் பிடிக்காதவர்கள் கண்ணாடிப் பாலம் உடைந்ததாகத் தவறான தகவல்களைக் கூறுகிறார்கள். செய்திகளும் தவறாக வெளியிடப்படுகிறது. கண்ணாடிப் பாலத்தில் ஒரே நேரத்தில் 650 பேர் நிற்கும் வகையில் உறுதித்தன்மையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. சராசரியாக நாள் ஒன்றுக்கு 8 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் அதனைப் பயன்படுத்தி வருகின்றனர். இதுவரை சுமார் 17 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

அதிமுக குற்றச்சாட்டு

விபத்தால் ஏற்பட்ட கீறல் முழுமையாகச் சரி செய்யப்பட்டு பாலம் உறுதியுடன் உள்ளது. சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவதால் பூம்புகார் நிறுவனம் மூலம் மூன்று கப்பல்கள் வாங்க டெண்டர் கோரப்பட்டு கப்பல் கட்டுமானப் பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது" என்றார். முன்னதாகப் பாலம் உடைந்துவிட்டதாகவும் தரமற்ற முறையில் பாலம் கட்டப்பட்டுள்ளதாகவும் அதிமுகவினர் குற்றம் சாட்டியதோடு, அதனை முன்னாள் அமைச்சர்கள் நேரில் சென்று பார்வையிட்டதும் குறிப்பிடத்தக்கது. தனது பிரச்சாரத்தின்போதும் பாலத்தின் உறுதித்தன்மை குறித்து எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி இருந்த நிலையில் தற்போது தமிழக அரசு இந்த விளக்கத்தை அளித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+