இடைநீக்கத்துக்கு கட்சிக்குள் இருந்து அழுத்தம் காரணமா.. கராத்தே தியாகராஜன் பரபரப்பு விளக்கம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    சென்னை: கட்சிக்கு எதிரான செயல்பாடு..! காங்கிரசில் இருந்து கராத்தே தியாகராஜன் நீக்கம்...

    சென்னை: என்னை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தததற்கு கட்சிக்குள் இருந்து வந்த அழுத்தம் காரணமா என தெரியவில்லை என தென் சென்னை மாவட்டத் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.

    தென் சென்னை மாவட்டத் தலைவராக இருந்த கராத்தை தியாகராஜன், சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை சந்தித்த கராத்தே, உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

    Karate Thiyagarajan says that why he was suspended from Congress party

    இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து திருச்சியில் திமுக ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே என் நேரு, உள்ளாட்சி தேர்தலில் திமுகவும் தனித்து போட்டியிட வேண்டும் என பதிலுக்கு தெரிவித்தார்.

    இது கூட்டணிக்குள் விரிசலை ஏற்படுத்தும் நிலை உள்ளது. இந்த நிலையில் தென் சென்னை மாவட்டத் தலைவராக இருந்த கராத்தே தியாகராஜன் காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து சென்னையில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் எதற்காக என்னை கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்தனர் என தெரியவில்லை.

    இடைநீக்கத்துக்கு கட்சிக்குள் இருந்த அழுத்தமா, இல்லை வெளியிலிருந்த அழுத்தமா என தெரியவில்லை. பலமுறை காங்கிரஸில் இருந்து என்னை வெளியேற்றியிருக்கிறார்கள். ப.சிதம்பரத்தை சந்தித்த பிறகு அடுத்த கட்ட முடிவை எடுப்பேன் என தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+