Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிரம்பிய நீர் குறையாமல் இருக்கும் கபினி, கேஆர்எஸ்! மேட்டூர் அணையில் 50 % கூட காவிரி இல்லையே!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம், கர்நாடகாவில் கனமழை பெய்து வரும் நிலையில் இன்றைய தினம் அணைகளின் நீர் மட்டம் உயர்ந்திருக்கிறதா இல்லை அதே நிலையிலேயே இருக்கிறதா என்பதை பார்ப்போம்.

டெல்டா மாவட்டங்கள் தமிழகத்தின் அரிசி உற்பத்திக்கு வித்திடுகின்றன. தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை அழைக்கப்படுகிறது. இங்கு காவிரி நீர் வந்தால் விவசாயம் செழிப்பாக இருக்கும். ஆனால் தமிழகத்திற்கு காவிரி தர வேண்டும் என உச்சநீதிமன்றம், காவிரி நடுவர் மன்றம், என யார் தீர்ப்பு வழங்கினாலும் அதை கர்நாடகா மதிப்பதே இல்லை.

Karnataka Dam Water Level Today Whats the Status of Current Water Levels in Kabini and KRS Dams

எவ்வளவு மழை பெய்தாலும் பஞ்ச பாட்டு பாடி தண்ணீரை தருவதில்லை. ஆயினும் வருண பகவான் கருணையால் ஓரளவுக்கு மழை பெய்து மக்கள் காப்பாற்றப்பட்டு வருகிறார்கள். எனினும் நம் உரிமை எப்போது சரிவர, முறையாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. இன்றைய நிலவரப்படி (21.5.2024) கிருஷ்ணராஜ சாகர் அணை 92.97 அடி நீரும், கபினியில் 50.38 அடி நீரும் , ஹாரங்கியில் 89.53 அடி நீரும் ஹேமாவதியில் 69.07 நீரும் இருக்கிறது.

இதே நேற்றைய நிலவரப்படி, கிருஷ்ணராஜ சாகர் அணையில் 92.97 அடி நீரும், கபினியில் 50.38 அடி நீரும் ஹரங்கியில் 89.53 அடி நீரும் ஹேமாவதி அணையில் 69.07 அடி நீரும் இருப்பு உள்ளது. அதாவது நேற்றைய நிலவரத்தில் எந்த மாற்றமும் இல்லை.

தமிழகத்தில் இன்றைய நிலவரப்படி மேட்டூரில் தற்போது 42.7 அடி நீர் இருப்பு உள்ளது. அது போல் பவானி சாகரில் 49.5 அடியும் அமராவதியில் 27.1 அடியும் வைகையில் 39.14 அடியும் மணிமுத்தாறில் 95.25 அடியும் பேச்சிபாறையில் 27.7 அடியும் திருமூர்த்தியில் 38.63 அடியும், சாத்தனூரில் 117.15 அடியும் நீர் இருப்பு உள்ளது.

அதாவது தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி மேட்டூரில் தற்போது 42.7 அடி நீர் இருப்பு உள்ளது. அது போல் பவானி சாகரில் 49.5 அடியும் அமராவதுயில் 27.1 அடியும் வைகையில் 114.15 அடியும் மணிமுத்தாறில் 67.6 அடியும் பேச்சிபாறையில் 27.7 அடியும் திருமூர்த்தியில் 38.63 அடியும், சாத்தனூரில் 117.15 அடியும் நீர் இருப்பு உள்ளது.

அதாவது கர்நாடகாவில் உள்ள அனைத்து முக்கிய அணைகளிலும் இன்னும் குறையவே இல்லை. ஆனால் தமிழகத்தில் ஒரு சில அணைகளில் நீர் இருப்பு வெகுவாகவே குறைந்துள்ளது. உதாரணமாக வைகையில் நேற்றைய தினம் 114.15 அடி நீர் இருந்த நிலையில் இன்று 39.14 அடிநீர்தான் இருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+