ப.சிதம்பரத்துக்கு கணக்கில் காட்டாத சொத்து.. ஒரு துளி ஆதாரத்தையாவது அரசு வெளியுடுமா.. கார்த்தி கேள்வி
சென்னை: சட்டவிரோதமாக பணம் ஈட்ட வேண்டிய அவசியம் எங்கள் குடும்பத்திற்கு இல்லை; தேவையான சொத்துகள் இருப்பதால் தவறான பணம் சேர்க்க அவசியம் இல்லை என கார்த்தி சிதம்பரம் எம்பி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்தனர். அவர் சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்பியுமான கார்த்தி சிதம்பரம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் கடந்த சில நாட்களாக ப. சிதம்பரம் குறித்து சில ஊடகங்கள் ஆராயாமல் , ஆதாரமற்ற, அத்துமீறி சில கருத்துகளை வெளியிட்டு வருவது எங்களுக்கு வேதனை அளிக்கிறது.
|
அவதூறு
ப. சிதம்பரத்தை அவமானப்படுத்தவும் அவதூறு சொல்லவும் மத்திய அரசின் நோக்கம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவதூறு கருத்துகளை எதிர்த்து சுதந்திரமாக செயல்பட வேண்டிய ஊடகங்கள் அவ்வாறு செயல்படாதது வேதனையை அளிக்கிறது.

கண்ணியம்
சட்டத்தின் ஆட்சிதான் எங்களையும் ஊடகங்களையும் பாதுகாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஊடகங்கள் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் காக்க வேண்டும்.

நம்பிக்கை
50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் உள்ள ப. சிதம்பரம் அப்பழுக்கற்றவர். சிதம்பரத்தின் பங்களிப்பை அவதூறு குற்றச்சாட்டால் அழித்துவிட முடியாது. இறுதியில் நிச்சயமாக உண்மை வெல்லும் என்பதில் நம்பிக்கையுடன் உள்ளோம்.

பணம்
நாங்கள் போதுமான சொத்துகளை வைத்துள்ள சிறிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் வருமான வரியை தவறாமல் செலுத்திவிடுகிறோம். சட்டவிரோதமாக பணம் ஈட்ட வேண்டிய அவசியம் எங்கள் குடும்பத்திற்கு இல்லை; தேவையான சொத்துகள் இருப்பதால் தவறான பணம் சேர்க்க அவசியம் இல்லை.

அரசால் முடியுமா
பல நாடுகளில் சொத்துகள்,வங்கிக் கணக்குகள் இருப்பதாக வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இவையெல்லாம் கட்டுக் கதைகள். இவை நிச்சயம் ஒரு நாள் அழிந்து போகும். கணக்கில் காட்டாத சொத்து ப. சிதம்பரத்துக்கு உள்ளதாக ஒரு துளி ஆதாரத்தையாவது அரசால் வெளியிட முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
"கோடீஸ்வரர்".. ராஜ்யசபா எம்பியாகும் தேமுதிகவின் எல்கே சுதீஷ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? -
அர்ஜுன் டெண்டுல்கர் திருமணத்திற்கு கூட வரலையே.. சுப்மன் கில் - சாரா டெண்டுல்கர் பிரேக் அப்? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
ஏழைகளின் ஏவுகணை.. இஸ்ரேல், அமெரிக்காவை அதிரவைக்கும் ஈரானின் குட்டி ஜாம்பவான்.. கேம் சேஞ்சர் -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
கோவையில் புதிய வீடு கட்டிய உரிமையாளருக்கு அரசு ஊழியர் தந்த ட்விஸ்ட்.. மறக்க முடியாத சம்பவம் -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications