ப.சிதம்பரத்துக்கு கணக்கில் காட்டாத சொத்து.. ஒரு துளி ஆதாரத்தையாவது அரசு வெளியுடுமா.. கார்த்தி கேள்வி
சென்னை: சட்டவிரோதமாக பணம் ஈட்ட வேண்டிய அவசியம் எங்கள் குடும்பத்திற்கு இல்லை; தேவையான சொத்துகள் இருப்பதால் தவறான பணம் சேர்க்க அவசியம் இல்லை என கார்த்தி சிதம்பரம் எம்பி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப. சிதம்பரத்தை சிபிஐ அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்தனர். அவர் சிபிஐ காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ப.சிதம்பரத்தின் மகனும் சிவகங்கை எம்பியுமான கார்த்தி சிதம்பரம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில் கடந்த சில நாட்களாக ப. சிதம்பரம் குறித்து சில ஊடகங்கள் ஆராயாமல் , ஆதாரமற்ற, அத்துமீறி சில கருத்துகளை வெளியிட்டு வருவது எங்களுக்கு வேதனை அளிக்கிறது.
|
அவதூறு
ப. சிதம்பரத்தை அவமானப்படுத்தவும் அவதூறு சொல்லவும் மத்திய அரசின் நோக்கம் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் அவதூறு கருத்துகளை எதிர்த்து சுதந்திரமாக செயல்பட வேண்டிய ஊடகங்கள் அவ்வாறு செயல்படாதது வேதனையை அளிக்கிறது.

கண்ணியம்
சட்டத்தின் ஆட்சிதான் எங்களையும் ஊடகங்களையும் பாதுகாக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஊடகங்கள் சுதந்திரத்தையும் கண்ணியத்தையும் காக்க வேண்டும்.

நம்பிக்கை
50 ஆண்டுகளாக பொது வாழ்க்கையில் உள்ள ப. சிதம்பரம் அப்பழுக்கற்றவர். சிதம்பரத்தின் பங்களிப்பை அவதூறு குற்றச்சாட்டால் அழித்துவிட முடியாது. இறுதியில் நிச்சயமாக உண்மை வெல்லும் என்பதில் நம்பிக்கையுடன் உள்ளோம்.

பணம்
நாங்கள் போதுமான சொத்துகளை வைத்துள்ள சிறிய குடும்பத்தை சேர்ந்தவர்கள். நாங்கள் வருமான வரியை தவறாமல் செலுத்திவிடுகிறோம். சட்டவிரோதமாக பணம் ஈட்ட வேண்டிய அவசியம் எங்கள் குடும்பத்திற்கு இல்லை; தேவையான சொத்துகள் இருப்பதால் தவறான பணம் சேர்க்க அவசியம் இல்லை.

அரசால் முடியுமா
பல நாடுகளில் சொத்துகள்,வங்கிக் கணக்குகள் இருப்பதாக வரும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது. இவையெல்லாம் கட்டுக் கதைகள். இவை நிச்சயம் ஒரு நாள் அழிந்து போகும். கணக்கில் காட்டாத சொத்து ப. சிதம்பரத்துக்கு உள்ளதாக ஒரு துளி ஆதாரத்தையாவது அரசால் வெளியிட முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications