காலையிலேயே மெரினாவில் கூடிய கூட்டம்! களைகட்டிய திமுகவின் மாரத்தான்! பணத்தை அள்ளிய வெற்றியாளர்கள்
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவையொட்டி திமுக சார்பில் கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி இன்று அதிகாலையில் அவரது நினைவிடத்தில் இருந்து தொடங்கியது. இதில் பல ஆயிரம் பேர் பங்கேற்ற நிலையில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பரிசுத்தொகையை வழங்கினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை திமுக கொண்டாடி வருகிறது. இந்த விழாவையொட்டி மாநிலம் முழுவதும் திமுகவினர் பொதுக்கூட்டங்கள் நடத்தி மக்கள் நலத்திட்டங்களை வழங்கி வருகின்றனர்.

இதன் ஒருபகுதியாக தான் சென்னையில் திமுக சார்பில் கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி நடத்த திட்டமிடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தது.
அதன்படி திட்டமிட்டப்படி இன்று அதிகாலை 4 மணிக்கு கருணாநிதி நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் இருந்து தொடங்கியது. போட்டியை அமைச்சர் கேஎன் நேரு தொடங்கி வைத்தார். கேஎன் நேரு 42 கிலோமீட்டர் பிரிவுக்கான மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு காலை 5 மணிக்கு அமைச்சர் உதயநிதி 5 கிமீ, 10 கிமீ, 21 கிமீ தொலைவுக்கான மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். இதையடுத்து போட்டியில் பங்கேற்ற பல ஆயிரம் பேர் மாரத்தான் போட்டியில் ஓட தொடங்கினர். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் அருகே தொடங்கிய மாரத்தான் போட்டிகள் காமராஜர் சாலை, கலங்கரை விளக்கம், பட்டினப்பாக்கம், முத்து லெட்சுமி பார்க், பெசன்ட் நகர், இந்திரா நகர், ஓ.எம்.ஆர்.சாலை, வாலாஜா சாலை, சிவானந்தா சாலை வழிகளில் நடைபெற்றது.
இந்த மாரத்தான் போட்டி மொத்தம் 4 பிரிவுகளில் நடைபெற உள்ளது. அதன்படி 5 கிமீ, 10 கிமீ, 21 கிமீ, 42 கிமீ என்ற அளவில் தனித்தனியே நடைபெற்றது. போட்டி முடிவடைந்தவுடன் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதன்படி 42 கிமீ, 21 கிமீ பிரிவில் ஓடி வென்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம், 2ம் பரிசாக ரூ.50 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது.

மேலும் 10 கிமீ பிரிவில் முதல் பரிசாக ரூ.50 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.25 ஆயிரம், 3ம் பரிசாக ரூ. 15 ஆயிரம் வழங்கப்படுகிறது. 5 கிமீ பிரிவில் வென்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.25 ஆயிரம், 2ம் பரிசாக ரூ.15 ஆயிரம், 3ம் பரிசாக ரூ.5 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டது. இந்த பரிசுத்தொகையை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
முன்னதாக இந்த போட்டியை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலையில் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
Gold Investors: தங்கம் விலை தொடர் சரிவு! முதலீட்டாளர்களுக்கு நஷ்டம்? என்ன நடக்கிறது? -
AMMK: அமமுக போட்டியிடும் 11 தொகுதியின் உத்தேச பட்டியலை கொடுத்த தினகரன்! கோவில்பட்டி எங்கே? -
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
சென்னை தங்க பஸ்சில் நடந்த சம்பவம்.. கொஞ்சம் பொறுப்போட நடங்க! பயணிகளுக்கு நெட்டிசன்கள் அட்வைஸ் -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
கங்கணம் கட்டிக்கொண்டு வேலை.. மொத்த தமிழக பாஜகவும் ஸ்டன் ஆகி நிற்குதே.. யாருங்க இந்த த பா ஜி? -
விலை பேசப்படும் காங்கிரஸ் சீட்டுகள்! ராகுல் காந்திக்கு பறந்த புகார்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி












Click it and Unblock the Notifications