எம்ஜிஆர்-சிவாஜியை உச்ச நட்சத்திரமாக்கியவர் கலைஞர்! சிறுவயது நினைவுகளை பகிர்ந்து கமல்ஹாசன் நெகிழ்ச்சி
சென்னை: சென்னை கிண்டியில் நடந்த கலைஞர் 100 விழாவில் நடிகர் கமல்ஹாசன் கலந்துகொண்டார். அப்போது பேசிய கமல்ஹாசன், எம்ஜிஆர், சிவாஜியை தனது எழுத்தால் உச்ச நட்சத்திரமாக்கியவர் கலைஞர் கருணாநிதி என்று பேசினார்.
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் இன்று மாலை 5 மணி அளவில் 'கலைஞர் 100' நிகழ்வு தொடங்கியது. இந்த விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள், நடிகைகள் பலரும் பங்கேற்றுள்ளனர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது மனைவி லதா ரஜினிகாந்த்துடன் கலந்து கொண்டார். அதே போல நடிகர் கமல்ஹாசன், நடிகர் சூர்யா, தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

நடிகைகள், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், கௌதமி, நடிகர் சிவராஜ் குமார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் வடிவேலு, கார்த்தி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, இயக்குநர் வெற்றிமாறன், நடிகை ரோஜா ஆகியோரும் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிலையில் விழாவில் பேசிய நடிகர் கமல்ஹாசன், எம்ஜிஆர், சிவாஜி ஆகியோரை தனது எழுத்தால் உச்ச நட்சத்திரமாக்கியவர் கலைஞர் கருணாநிதி என்று பேசினார். நடிகர் கமல்ஹாசன் பேசியதாவது:-
மேடையின் ஓரமாக நின்று பேசுகிறேன் என்று யாரும் நினைக்க வேண்டாம். கலைஞர் மேடையில் நான் எப்போதும் ஒரு ஓரம் தான். கலைஞரையும் தமிழையும், கலைஞரையும் சினிமாவையும், கலைஞரையும் அரசியலையும் பிரிக்க முடியாது. பாடல்கள் பிடியில் இருந்த சினிமாவினை வசனம் வசப்படுத்தியவர் என்றால் அது கலைஞர் தான்.
எம்ஜிஆர், சிவாஜி ஆகியோரை தனது எழுத்தால் உச்ச நட்சத்திரமாக்கியவர் கலைஞர் கருணாநிதி. என்னுடைய தமிழ் ஆசான்கள் மூன்று பேர். ஒருவர் கருணாநிதி, ஒருவர் சிவாஜி, ஒருவர் எம்ஜிஆர். சிறுவயதில் நான் கலைஞரை போல ஹேர் ஸ்டைல் வைக்க வேண்டும் என்று என் அக்காவிடம் கூறுவேன். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மக்களுடன் உரையாடுவதை விடக்கூடாது என்று கருணாநிதியிடம் கற்றுக்கொண்டதால் தான் இன்று பிக்பாஸ் மூலம் மக்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன்.
விஜயகாந்த் இறுதி ஊர்வலத்தை சிறப்பாக நடத்தி கொடுத்த அரசியல் மாண்பிற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இந்த பண்பு எங்கிருந்து கற்றுகொண்டது என்று எனக்கு தெரியும். கலைஞர் கருணாநிதிக்கும், தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு நடிகர் கமல்ஹாசன் பேசினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications