Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்டாலின் என்றாலே உழைப்பு.. திமுக முப்பெரும் விழாவில் தோன்றிய AI கருணாநிதி! தொண்டர்கள் நெகிழ்ச்சி

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் நடந்த திமுக முப்பெரும் விழாவில், திமுகவை ஆட்சியில் கம்பீரமாக ஸ்டாலின் அமர வைத்துள்ளதாகவும்.. ஸ்டாலின் என்றாலே உழைப்பு உழைப்பு உழைப்புதான்.. கழக பணியில் 55 ஆண்டுகளாக அயராது உழைப்பவர் ஸ்டாலின் என கருணாநிதி உரையாற்றுவது போல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முப்பெரும் விழாவில் கருணாநிதியின் குரல் ஏஐ தொழில் நுட்பத்தில் ஒலித்ததை கேட்டதும் தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.

தமிழகத்தில் ஆளும் திமுக தொடங்கி 75 ஆண்டுகள் ஆவதையொட்டி பவளவிழா, அண்ணா பிறந்த நாள், பெரியார் பிறந்தநாள் ஆகிய முப்பெரும் விழா இன்று நடைபெற்று வருகிறது. சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று மாலை இந்த முப்பெரும் விழா தொடங்கியது.

dmk mk stalin chennai

முப்பெரும் விழாவுக்கு திமுக பொதுச்செயலாளரும், அமைச்சருமான துரைமுருகன் தலைமை தாங்கினார். திமுக தலைவரும் முதல்வருமான முக ஸ்டாலின் கலந்து கொண்டார். திமுகவின் 75 ஆண்டு கால சாதனைகள், கட்சி சந்தித்த சோதனைகள் ஆகியவை அடங்கிய விவரங்கள் 500-க்கும் மேற்பட்ட பதாகைகளாக விழா நடைபெறும் இடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் ஆயிரக்கணக்கான திமுக தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

விழா தொடங்கியதும், மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி மேடையில் அமர்ந்து இருப்பது போல ஏஐ தொழில் நுட்பம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இரு பெரிய இருக்கைகளில் கருணாநிதி, ஸ்டாலின் அமர்ந்துள்ளது போல ஏஐ மூலம் காட்சியமைப்பு செய்யப்பட்டு இருந்தது. இது மட்டும் இன்றி திமுக பவள விழாவை முன்னிட்டு ஏஐ தொழில் நுட்பம் மூலம் கருணாநிதி வாழ்த்து தெரிவித்து உரையாற்றுவது போல ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது.

திமுகவை ஆட்சியில் கம்பீரமாக ஸ்டாலின் அமர வைத்துள்ளதாகவும் ஸ்டாலின் என்றாலே உழைப்பு உழைப்பு உழைப்புதான்.. கழக பணியில் 55 ஆண்டுகளாக அயராது உழைப்பவர் என ஏஐ தொழில் நுட்பம் மூலம் கருணாநிதி உரையாற்றுவது போல ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. முப்பெரும் விழாவில் கருணாநிதியின் குரல் ஏஐ தொழில்நுட்பத்தில் ஒலித்ததை கேட்டதும் தொண்டர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.


முப்பெரும் விழாவில் 18 இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 5,000 வாழை மரங்கள் தோரணங்களாக கட்டப்பட்டுள்ளன. 11 இடங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கிறது. முப்பெரும் விழாவை முன்னிட்டு சென்னை அண்ணா அறிவாலயமும் வண்ண விளக்குகளால் ஜொலித்து வருகிறது.

திமுக முப்பெரும் விழாவில் திமுகவின் விருதுகள், தொண்டர்களுக்கான பணமுடிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். பெரியார் விருது- பாப்பம்மாள்; அண்ணா விருது- அறந்தாங்கி மிசா ராமநாதன்; கருணாநிதி விருது ஜெகத்ரட்சகன்; பாவேந்தர் விருது- கவிஞர் தமிழ்த் தாசன்; பேராசிரியர் விருது- விபி ராஜன் ஆகியோருக்கு வழங்கப்பட்டது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+