ஜாமீன் நிபந்தனைகளிலிருந்து கருணாஸுக்கு 4 நாள் விலக்கு.. கோர்ட் உத்தரவு
நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருக்கும் கருணாஸுக்கு தேவர் ஜெயந்தியில் கலந்து கொள்வதற்காக நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்திருக்கும் கருணாஸுக்கு தேவர் ஜெயந்தியில் கலந்து கொள்வதற்காக நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கருணாஸ் பேசினார். அதில் முதல்வரையே நான் அடிப்பேன் என்றும் போலீசுக்கு எதிராகவும் பேசினார் .

மேலும் ஜாதி கலவரத்தை தூண்டும் வகையிலும், கொலை செய்வேன் என்றும் கூட அவர் பேச்சில் சில கருத்துக்கள் இடம்பெற்று இருந்தது. இந்த நிலையில் இவர் கைது செய்யப்பட்டார்.
இவர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டது. கைது செய்யப்பட்ட இவர் ஜாமீன் பெற்று வெளியே வந்துள்ளார். இவர் நுங்கம்பாக்கம், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கையெழுத்து இட வேண்டும் என்ற நிபந்தனையுடன் ஜாமீன் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கருணாஸுக்கு நிபந்தனையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கருணாசுக்கு அளித்த நிபந்தனை ஜாமினில் 4 நாள் நிபந்தனைகள் விலக்கு அளிக்கப்படுவதாக எழும்பூர் நீதிமன்றம் கூறியுள்ளது. வரும் 27-ம் தேதி முதல் 30 வரை விலக்கு அளித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்பதற்காக விலக்கு அளித்தார்கள். தொகுதி மக்களை பல நாட்களாக பார்க்கவில்லை. அவர்களை பார்க்க கோரிக்கை வைத்திருந்தேன். அதனால் விலக்கு அளித்தார் என்று கருணாஸ் கூறியுள்ளார்.
-
எடப்பாடி சாமர்த்தியசாலியா.. அமித்ஷா சாமர்த்தியசாலியா.. அதிமுக கூட்டணியில் நடக்கும் எதார்த்தம் என்ன -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம்












Click it and Unblock the Notifications