Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை விசாரிக்கும் எஸ்.ஐ.டி.. இடம் பெற்றுள்ள போலீஸ் அதிகாரிகள் யார் யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் குறித்து விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவின் விவரம் வெளியாகி உள்ளது. வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் குழுவில் சியாமளா தேவி, விமலா ஆகிய 2 பெண் எஸ்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். வழக்கின் ஆவணங்களை கரூர் போலீசாரிடம் இருந்து சிறப்பு புலனாய்வு குழு இன்று பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் கரூர் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. கரூர் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தவெக மாவட்ட செயலாளர்கள் இருவரை கைது செய்தனர்.

SIT Karur High Court

இதேபோல் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து இந்த வழக்கானது சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு மாற்றப்பட உள்ளது.

இந்த சிறப்பு புலனாய்வு குழுவானது வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த குழுவில் யார் யார் இடம்பெற்றுள்ளனர் என்ற தகவலானது வெளியாகி உள்ளது. இதில் இரண்டு பெண் எஸ்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். அதாவது சியாமளா தேவி, விமலா ஆகிய 2 பெண் எஸ்பிக்கள் இடம்பெற்றுள்ளனர். ஏடிஎஸ்பிக்கள் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளன. வழக்கின் ஆவணங்களை கரூர் போலீசாரிடம் இருந்து சிறப்பு புலனாய்வு குழு இன்று பெற உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+