Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கரூர் சம்பவம்.. விஜய் கைது செய்யப்படுவாரா? விசிக தலைவர் தொல் திருமாவளவன் பரபர பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூரில் கடந்த சனிக்கிழமை நடந்த விஜய்யின் தவெக பிரசார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தவெக நிர்வாகிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். புஸ்சி ஆனந்த், சிடிஆர் நிர்மல் குமார் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தவெக தலைவர் விஜய்யும் கைது செய்யப்படலாம் என தகவல் பரவி வரும் நிலையில், விஜய் கைது செய்யப்படுவாரா என்பதற்கு தொல் திருமாவளவன் பதில் அளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கரூரில் கடந்த 27 ஆம் தேதி தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் 10 பேர், பெண்கள் 17 பேர் என மொத்தம் 41 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் தமிழகம் முழுக்க பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

karur-tvk-stampede-will-vijay-be-arrested-vck-chief-thol-thirumavalavan-speaks-out

5 பிரிவுகளில் வழக்கு பதிவு

பல்வேறு தலைவர்கள் இந்த சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்து உள்ளனர். சம்பவம் தொடர்பாக பல்வேறு விசாரணைகளும் நடந்து வருகின்றன. ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையமும் விசாரணை நடத்தி வருகிறது. கரூர் நகர் காவல்துறை சார்பிலும் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கரூர் டவுன் போலீஸ் நிலையத்தில் தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், மாநில இணை செயலாளர் நிர்மல்குமார், கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் மற்றும் சிலர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்யப்பட்டு உள்ளது. அவர்கள் மீது 5 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட இந்த முதல் தகவல் அறிக்கை கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட்டு எண்-1 கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

விஜய் கைது செய்யப்படுவாரா?

கரூர் மேற்கு மாவட்ட தவெக செயலாளர் மதியழகன் உள்பட 2 நிர்வாகிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தமிழக முதல்வர் ஸ்டாலின் கூறுகையில், எந்த ஒரு கட்சி தலைவரும் தங்களுடைய தொண்டர்களும், அப்பாவி மக்களும் இறப்பதை எப்போதும் ஏற்பதில்லை. கரூர் சம்பவம் பற்றி சமூக வலைதளங்களில் வதந்திகள் பரப்புவதை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

எனினும் சமூக வலைதளங்களில் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பரப்பி வந்தனர். இதையடுத்து 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே கரூரில் 41 பேர் பலியான சம்பவத்தில் விஜய்யை கைது செய்ய வேண்டும் என சிலர் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் விஜய் கைது செய்யப்பட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விகளையும் முன்வைத்து வருகிறார்கள்.

தொல் திருமாவளவன் பதில்

இந்த நிலையில் தான் இன்று செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவனிடம் கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விஜய் கைது செய்யப்பட வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்வி எழுப்பினர். இதற்கு தொல் திருமாவளவன் பதில் அளித்து கூறியதாவது:-

விஜய் அவரது பெயர் கரூர் கூட்ட நெரிசல் வழக்கு எஃப்.ஐ.ஆரில் சேர்க்கப்படவில்லை. அப்படி இருக்கையில் விஜய்யை கைது செய்ய வேண்டும் என்று கோருவதில் எந்த அர்த்தமில்லை. இதில் வேறு எந்து வகையிலாவது விஜய்க்கு இதில் தொடர்பு இருக்கிறது என்று அரசு கருதினால் சட்டப்பூர்வமாக அதில் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

வேண்டும் என்றே அவதூறு

சமூக வலைத்தளத்தில் திமுகவுக்கு எதிராக ஒரு சிலர் வெறுப்பை பரப்பி வருகிறார்கள். திமுக ஆட்சியில் இருப்பதால் பெரிய அளவில் விமர்சனத்துக்கு உள்ளாகிறது. திட்டமிட்டு திமுக, திமுக அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி வருகிறார்கள். பாஜக அண்ணாமலையை பொறுத்தவரை எந்த ஒரு விசாரணையும் தொடங்குவதற்கு முன்பே கருத்து கூறுகிறார். எனவே அவர் வேண்டும் என்றே அரசியல் செய்வதாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+