காஷ்மீரில் நடந்தது நாளை தமிழ்நாட்டிலும் நடக்கும்.. கருணாநிதி சிலை திறப்புவிழாவில் மமதா எச்சரிக்கை!
சென்னை: ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்தது நாளை தமிழகத்திலும் வங்கத்திலும் கூட நடக்கலாம் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி நினைவு தினத்தை அடுத்து கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் திமுகவின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது.
இதையடுத்து முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஓராண்டு நினைவு தின கூட்டம் சென்னை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி மிகவும் உருக்கமாக பேசினார்.

என்ன சொன்னார்
கருணாநிதி குறித்து தொடக்கத்தில் தமிழில் பேசினார் மமதா பானர்ஜி அதன்பின் ஆங்கிலத்தில் பேசினார். அதில், தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் வணக்கம். ஒருவருடத்திற்கு முன் கருணாநிதியின் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தேன். கருணாநிதி தமிழ் தாயின் தலைமகன். தமிழக அரசியலின் தலை சிறந்த தலைவர் அவர்.எனக்கு சரியாக தமிழ் பேச தெரியாது, விரைவில் நன்றாக பேசுவேன். வணக்கம் என்று சொல்ல எனக்கு மிகவும் பிடிக்கும்.

எப்படி
கருணாநிதியை யாராலும் மறக்க முடியாது. கருணாநிதியின் செயல்கள் எப்போதும் நாடு முழுக்க பேசப்படும். ஸ்டாலின் என்ற பெயரே புரட்சிக்கான பெயர்.பெயருக்கு ஏற்றபடி ஸ்டாலின் அநீதிக்கு எதிராக போராடுகிறார். கருணாநிதி இன்றும் நம்முடன் கொள்கையாக இருக்கிறார். மக்களுக்காக நாம் போராட வேண்டும் என்று கருணாநிதி உணர்த்தினார்.

என்ன மொழி
தாய் மொழிக்காக போராட கற்றுக்கொடுத்தவர் கருணாநிதி. கருணாநிதி ஒரு சரித்திரம். சிறுபான்மை மக்களுக்காக கருணாநிதி போராடினார். எந்த விதமான பாசிச திட்டங்களுக்கும் எதிராக நாங்கள் போராடுவோம். நாங்கள் தமிழகத்தையும், வங்கத்தையும் விட்டுக்கொடுக்க மாட்டோம். நாங்கள் இந்த போராட்டத்தில் தோல்வி அடைய மாட்டோம்.

காஷ்மீர்
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டிய காஷ்மீர் அரசியல் தலைவர்களை வீட்டு சிறையில் வைத்து இருக்கிறது பாஜக. அவர்கள் இங்கே வர வேண்டியவர்கள். அவர்களை பாஜக அடைத்து வைத்து இருக்கிறது. அவர்கள் தமிழகத்திலும் இப்படி செய்ய நினைப்பார்கள்.

என்ன விருப்பம்
தமிழக மக்களின் விருப்பம் இல்லாமல் அவர்கள் இப்படி செய்ய நினைப்பார்கள். ஆனால் நாம் அனைத்தையும் எதிர்க்க வேண்டும். நம்முடைய இரண்டு மாநிலத்திலும் ஒன்றாக தேர்தல் நடக்க போகிறது. நாம் ஒன்றாக வெல்ல வேண்டும். நம்முடைய வெற்றியை மக்களுக்கு நாம் பரிசளிக்க வேண்டும், ஜெய் பெங்கால்.. ஜெய் தமிழ்நாடு.. ஜெய் திராவிடம் என்று மமதா பானர்ஜி குறிப்பிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications