சில வட இந்தியத் தலைவர்கள் செய்த முட்டாள்தனம்... மார்க்கண்டேய கட்ஜு அதிரடி
Recommended Video

சென்னை: சில முட்டாள் வட இந்தியத் தலைவர்கள் செய்த காரியத்தால்தான் இன்று தமிழர்கள் இந்தி பேச முடியாமல் திணறுகின்றனர் என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது முகநூலில் ஒரு பதிவை போட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

சென்னையில் மறைந்த ஜெயலலிதாவை சந்தித்த விவரத்தை நான் கூற விரும்புகிறேன். சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற பின்னர் இந்த சந்திப்பு நடந்தது. தமிழக அரசின் தலைமை செயலகத்தில் உள்ள ஜெயலலிதாவின் அலுவலகத்தில் வைத்து அவரைப் பார்த்தேன். அப்போது நான் இந்திய பிரஸ் கவுன்சில் தலைவராக இருந்தேன். ஜெயலலிதா முதல்வராக இருந்தார்.
[14 வருஷத்துக்கு முன்னாடியே எச்சரித்தும்.. அலட்சியம் காட்டிய அதிகாரிகள்.. குமுறும் திருச்சி மக்கள்!]
சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதிகள் வீட்டு வேலைக்கு ஆட்களை வைத்துக் கொள்வதற்கு அனுமதி தருமாறும், அதற்குரிய ஊதியத்தை அரசே வழங்க வேண்டும் என்றும் ஜெயலலிதாவிடம் கோரிக்கை வைப்பதற்காக நான் போயிருந்தேன். நான் நேரம் கேட்டதுமே அவர் உடனடியாக அப்பாயின்ட்மென்ட் கொடுத்து வரச் சொன்னார். அவரது அறையில் அரசியல்வாதிகள் யாரும் இல்லை. 7 அல்லது 8 ஐஏஎஸ் அதிகாரிகள்தான் இருந்தனர். அறையின் ஓரத்தில் அமர்ந்திருந்தனர்.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்த விவகாரத்தை பேசி முடித்த பின்னர் (அலவன்ஸ் வழங்க அவர் ஒப்புக் கொண்டார்) நான் அவரிடம் பொதுவாக பேசினேன். தமிழர்கள் மீது நான் அளவற்ற அன்பும், மதிப்பும் வைத்திருப்பதை அவரிடம் விளக்கினேன். தமிழர்கள் இந்தி கற்க வேண்டியதன் அவசியத்தையும் அவரிடம் தெரிவித்தேன். வட இந்தியாவுக்கு வரும் தமிழர்கள் இந்தியில் பேசி சிரமப்படுவதையும் அவரிடம் தெரிவித்தேன். வட இந்தியர்களுக்கு இந்திதான் தெரியும். குறிப்பாக ஆட்டோ, டாக்சி டிரைவர்கள், கடைக்காரர்களுக்கு ஆங்கிலம் தெரியாது. எனவே அதுபோன்ற சமயங்களில் தமிழர்கள் பெரும் சிரமப்பட நேரிடுகிறது.
நான் பேசுவைத அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த ஜெயலலிதா நான் எதிர்பாராத வகையில் இந்தியில் பேசத் தொடங்கினார். சாதாரணமாக அல்ல, ஒரு வட இந்தியர் எப்படிப் பேசுவாரோ, அந்த அளவுக்கு மிகத் தெளிவான இந்தியில், நல்ல புலமையுடன் பேசினார். அவர் பேசப் பேச நான் ஆச்சரியப்பட்டுப் போனேன். அவரிடமிருந்து, ஒரு தமிழரிடமிருந்து இந்த அளவுக்கு தெளிவான இந்தியை நான் எதிர்பார்க்கவில்லை. அவர் சொன்ன அனைத்தையும் நான் ஆமோதித்தேன்.
உண்மையில் சில வட இந்திய அரசியல் தலைவர்கள்தான் இந்தியை திணிக்க முயன்றனர். அந்த முட்டாள்தனத்தால்தான், இன்று தமிழர்கள் இந்தியில் பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இல்லாவிட்டால் இன்று தமிழர்கள் இந்தியிலும் கோலோச்சியிருப்பார்கள் என்று கூறியுள்ளார் கட்ஜு.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications