Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திமுகவிலிருந்து நீக்கியதும் அழுத மு.க. அழகிரி! சித்தி துர்காவுடன் என்ன பிரச்சினை! கயல்விழி விளக்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாத்தா இறந்த போது அப்பா மு.க.அழகிரி மிகவும் உடைந்துவிட்டார் என்று அவருடைய மகள் கயல்விழி பேட்டி அளித்துள்ளார்.

மு.க.அழகிரி கடந்த 2014 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். அவர் அதன் பிறகு மீண்டும் கட்சியில் இணைய முயற்சித்த நிலையில் அது இன்று வரை நடக்கவில்லை. இந்த நிலையில் மு.க.அழகிரியையும் பெரியம்மா காந்தியையும் உதயநிதி ஸ்டாலின் போய் சந்தித்து அமைச்சரானதற்கு ஆசி பெற்றுள்ளார்.

Kayalvizhi says that Alagiri cried when he was sacked from DMK

அது போல் முதல்வர் ஸ்டாலினும் தனது மலரும் நினைவுகள் குறித்து பேசும் போது அண்ணன் அழகிரி குறித்தும் பேசுவார். ஆனால் முன்னாள் முதல்வர் கருணாநிதி இறப்பிற்கு பிறகு அழகிரியை நேருக்கு நேர் இருவரும் சந்தித்துக் கொள்ளவே இல்லை.

அண்மையில் தயாளு அம்மாள் பிறந்த நாளுக்கு ஆசி வாங்கச் சென்ற போது கூட இருவரும் தனித்தனியே சென்றனர். இந்த நிலையில் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி ஆனந்த விகடன் யூடியூப் சேனலுக்கு ஒரு பேட்டி அளித்துள்ளார். அதில் கருணாநிதியின் குடும்பம் குறித்து பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில் தாத்தாவுக்கும் அப்பாவுக்குமான உறவு சிறப்பாக இருந்தது.

அப்பாவை கட்சியை விட்டு நீக்கிய போது அப்பா கோபாலபுரம் வீட்டுக்கு சென்று தாத்தா கருணாநிதியை சந்தித்தார். அப்போது இருவரும் ரொம்ப எமோஷனல் ஆகி கட்டிபிடித்து அழுதுவிட்டார்கள். கட்சியை விட்டு நீக்கிய போது அப்பா உடைந்து போய்விட்டார். தாத்தா இப்படி செய்வார் என எதிர்பார்க்கவே இல்லை. அந்த வருத்தம் இன்னும் இருக்கு.

மீண்டும் திமுகவில் சேர அப்பாவுக்கு ஆசையாக இருக்கிறது. அதிமுக கோட்டையாக இருந்த தென் மண்டலத்தை கைப்பற்றி திமுக கோட்டையாக மாற்றியவர் அழகிரி. தாத்தா உயிரிழந்த போது அப்பா மிகவும் உடைந்துவிட்டார். மீண்டும் தாத்தாவுடன் சுமுக உறவில் ஈடுபட முயன்ற நேரத்தில் தாத்தா இறந்ததால் அப்பாவுக்கு நிறைய வருத்தம் இருக்கிறது.

திமுக ஆட்சிக்கு வந்ததில் அப்பாவுக்கு சந்தோஷம்தான் . அப்பாவை பொருத்தமட்டில் எப்போதும் தலைவர் என்றால் கலைஞர்தான். வேறு எந்த கட்சியிலும் சேர அழகிரி விரும்பவில்லை. ரஜினியோடு அப்பாவுக்கு நல்ல நட்பு உள்ளது. அம்மாவுக்கும் (காந்தி) சித்திக்கும் (துர்கா ஸ்டாலின்) இடையே நல்ல உறவு இருந்து வருகிறது. வெளியே அவர்களது உறவில் பிரச்சினை என சொல்வதெல்லாம் பொய்.

பாட்டி தயாளு அம்மாவுக்கு அப்பா என்றால் உயிர். அவருக்கு கண் ஆபரேஷன் செய்ததும் அப்பாவைதான் முதலில் பார்த்தார். அப்பாவுக்கு ஆங்கிலம் தெரியாததால் தேசிய அரசியலில் திணறினார் என நிறைய பேர் சொன்னார்கள். ஆனால் அப்பா அமைச்சராக சிறப்பாக பணியாற்றி வந்தார். இதை அனைவருமே பாராட்டியிருந்தார்கள். இவ்வாறு கயல்விழி தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+