பயமுறுத்தும் பறவைக் காய்ச்சல்.. "மாநில பேரிடர்.." கேரள அரசு அறிவிப்பு! ம.பி.யில் சிக்கன் விற்பனை தடை
சென்னை: பறவைக் காய்ச்சலை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. முதன்முறையாக பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்ட கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Recommended Video
பறவை காய்ச்சல் காரணமாக சிக்கன் மற்றும் முட்டைகளை விற்கும் கடைகளை 15 நாட்கள் மூடுமாறு மத்திய பிரதேசத்தில் உள்ள மண்ட்சார் மாவட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

அந்த மாவட்டத்தில் இதுவரை 100 காகங்கள் பறவைக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளன. எனவே கோழி மற்றும் முட்டை கடைகளை 15 நாட்கள் மூடுமாறு உத்தரவிட்டுள்ளது மாவட்ட நிர்வாகம்.
இந்தூரிலும், பறவைக் காய்ச்சலால் காகங்கள் உயிரிழந்துள்ளன. இறந்த காகங்களின் மாதிரிகளில் பறவைக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டதாகவும், இது தொடர்பாக கட்டுப்பாட்டு அறையை அமைத்து வருவதாகவும், கால்நடைகள் பராமரிப்புத் துறை அமைச்சர் பிரேம் சிங் படேல் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் கோட்டயம் மற்றும் ஆலப்புழா மாவட்டங்களின் சில பகுதிகளிலிருந்து பறவைக் காய்ச்சல் பரவுவதாகக் கூறப்படுகிறது, பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு கி.மீ சுற்றளவில் மற்றும் வாத்து, கோழிகள் மற்றும் பிற உள்நாட்டு பறவைகளை கொல்ல அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
மேலும், செவ்வாயன்று கேரள அரசு, பறவைக் காய்ச்சலை மாநில பேரிடராக அறிவித்தது. ஏற்கனவே உலகம் முழுக்க கொரோனா பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட நிலையில், பறவைக் காய்ச்சல் பேரிடரும் கேரளாவை உலுக்கியுள்ளது.
ஒரு பண்ணையில் சுமார் 1,650 வாத்துகள் பறவைக் காய்ச்சல் நோயால் இறந்துள்ளதுதான் அந்த மாநிலத்தில் பதிவான முதல் கேஸ். கோட்டயத்தின் நீண்டூர் பஞ்சாயத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்பதால் பறவைக் காய்ச்சல் அதிகம் பரவ வாய்ப்பு இல்லை என்கிறார்கள் அதிகாரிகள். இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
-
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல்












Click it and Unblock the Notifications