கேரளாவில் வேகமாக உயரும் கேஸ்கள்.. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 42,123 பேருக்கு கொரோனா!
சென்னை: இந்தியாவில் புதிதாக 42,123 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிய கேஸ்களின் எண்ணிக்கை இன்னும் 40 ஆயிரத்திற்கும் கீழ் குறையாமல் இருப்பது கவலையை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் மூன்றாம் அலை பாதிப்பு தொடங்கி உள்ள நிலையில் இந்தியாவிலும் எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் அலை தோன்றலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் ஆகஸ்ட் மாதத்தில் மூன்றாம் அலை பாதிப்பு தொடங்கும் என்று கூறுகிறார்கள்.
இந்தியாவில் மகாராஷ்டிரா, கேரளா ஆகிய மாநிலங்களில் இன்னும் கேஸ்கள் குறையவில்லை. முக்கியமாக கேரளாவில் புதிய கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்தியா
இந்தியாவில் 31,215,142 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 418,511 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 30,383,001 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 439,266 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 489 பேர் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் 62,29,596 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 9389 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 94,593 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 60,00,911 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 1,30,753 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா
கேரளாவில் ஆக்டிவ் கேஸ்கள் தொடர்ந்து வேகமாக உயர்ந்து வருகிறது. அங்கு தளர்வுகள் கொண்டு வரப்பட்டதில் இருந்தே கேஸ்கள் உயர்ந்து வருகிறது. கேரளாவில் 31,87,716 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 16,848 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,26,396 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 30,45,310 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 15,512 பேர் பலியாகி உள்ளனர்.

கர்நாடகா
கர்நாடகாவில் 28,86,702 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 1,464 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26,256 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 28,24,197 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 36,226 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் கேஸ்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது. இரண்டாவது நாளாக 2000க்கும் குறைவான கேஸ்கள் தமிழ்நாட்டில் பதிவாகி உள்ளது. தளர்வுகளுக்கு பின்பும் கேஸ்கள் குறைந்து வருகின்றன. 25,39,277 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு புதிதாக 1,904 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26,717 பேர் அங்கு ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். 24,78,778 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். 33,782 பேர் பலியாகி உள்ளனர்.












Click it and Unblock the Notifications