Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னைக்கு கணவருடன் வந்த கேரள பெண் ரோகிணி.. இப்படியா ஆகனும்.. திருவனந்தபுரம் ரயிலில் நடந்த கொடூரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளாவில் இருந்து சென்னைக்கு வந்துகொண்டிருந்த ரோகிணி என்ற பெண் ரயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அரசு குடிமைப் பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருந்த ரோகிணி, ரயிலில் ஜோலார்பேட்டை அருகே வந்தபோது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் பால்பண்ணை நடத்தி வரும் ராஜேஷ் என்பவரின் மனைவி ரோகிணி. 30 வயதான இவர் அரசு குடிமைப் பணிகளுக்காக நடத்தப்படும் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருந்தார். ராஜேஷ் - ரோகிணி தம்பதிக்கு 2½ வயதில் குழந்தை உள்ளது.

kerala-woman-dies-after-falling-from-train-arriving-in-chennai

காணாமல் போன ரோகிணி

ராஜேஷின் தந்தை சென்னையில் இருப்பதால், அவரை பார்க்க ராஜேஷும் - ரோகிணியும் முடிவு செய்தனர். குழந்தையை உறவினர்கள் வீட்டில் விட்டுவிட்டு திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயிலில் ரிசர்வேஷன் செய்து பயணம் செய்தனர். இந்த ரயில் நேற்று காலை ஜோலார்பேட்டை ரயில் நிலையம் வந்து நின்றது. சில நிமிடங்களில் ரயில் புறப்பட்டுள்ளது.

டாய்லட்டிற்கு சென்ற ரோகிணி நீண்ட நேரம் ஆகியும் தனது இருக்கைக்கு திரும்பவில்லை. இதனால், பதட்டம் அடைந்த கணவர் ராஜேஷ், டாய்லட் இருக்கும் பகுதிக்கு சென்றுள்ளார். ஆனால், அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜேஷ் உடனடியாக ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்தார். இதையடுத்து காட்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் ரோகிணியை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

கதறி அழுத கணவர்

அப்போது வாணியம்பாடியை அடுத்த புத்துக்கோவில் பகுதியில் உள்ள தண்டவாளம் ஒன்றில் பெண் ஒருவர் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற ரயில்வே போலீசார் அங்கு கிடந்த பெண் சடலத்தை கண்டுபிடித்தனர். பெண் அணிந்து இருந்த ஆடைகள் உள்ளிட்டவற்றை வைத்து ரயில் தண்டவாளத்தில் சடலாமக கிடந்தது ரோகிணி என்பதை போலீசார் உறுதி செய்தனர். மனைவி உடலை பார்த்ததும் கணவர் ராஜேஷ் கதறி அழுத காட்சிகள் அங்கு இருந்தவர்களின் கண்களை குளமாக்கியது.

அதேவேளையில், ரோகிணி தண்டவாளத்தில் எதிர்திசையில் ரயில் வரும் இடத்தில் இறந்து கிடந்தாக சொல்லப்படுகிறது. இது குறித்து நடத்தப்பட்ட முதல் கட்ட விசாரணையில், ரயில் இருந்து தவறி விழுந்த ரோகிணி, பலத்த காயத்துடன் எழுந்து உயிரை காப்பாற்ற எதிர்திசைக்கு நடந்தது வந்ததாதாகவும், யாரும் காப்பாற்ற முன்வராத நிலையில், அவர் உயிருக்கு போராடி இறந்ததாகவும் சொல்லப்படுகிறது.இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயிலில் தவறி விழுந்து பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+