அப்பா செய்ததெல்லாம் மறந்து போச்சா.. கொஞ்சம் நினைத்து பாருங்க.. வெளுத்த ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜா
சென்னை: அப்பாவை ஏமாற்று பேர் வழி பேசுவதை நிறுத்திவிட்டு அவர் செய்த நலத்திட்டங்களை நினைத்து பாருங்கள் என ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா ரகுமான் தனது ட்விட்டர் போஸ்ட்டில் தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.ரகுமான் செய்த நலத்திட்டங்களை போஸ்டர் போல் அவருடைய ரசிகர் ஒருவர் தயார் செய்துள்ளார். அந்த போஸ்டரை தனது ட்விட்டரில் ஏ.ஆர்.ரகுமானின் மகள் கதீஜா பகிர்ந்து கூறியிருப்பதாவது: நேற்று இரவு முதல் எல்லா ஊடகங்களும், சமூக ஊடகங்களும் ஏ.ஆர்.ரகுமான் ஒரு ஏமாற்று பேர் வழி போல் பேசி வருகிறார்கள். இதை வைத்து சிலர் மலிவான அரசியல் செய்கிறார்கள்.

நேற்று முன் தினம் ரசிகர்களுக்கு இடையூறு நடந்ததற்கு 100 சதவீதம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களே காரணம். ஆனாலும் அப்பா அதற்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டார். அப்பாவை ஏமாற்று பேர் வழி என பேசுவதற்கு முன் அவர் என்னவெல்லாம் செய்தார் என்பதை யோசித்து பாருங்கள் என கதீஜா கூறி சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.
2015 ஆம் ஆண்டு வெருவெள்ளத்தில் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவும் நோக்கத்தில் 2016ஆம் ஆண்டு சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் நெஞ்சே எழு என்ற இசை நிகழ்ச்சி நடத்தினார். அதில் கிடைத்த நிதியை பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுத்தார். அது போல் 2018 ஆம் ஆண்டு கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது வெளிநாடுகளில் இசைக் கச்சேரி நிகழ்த்தி உதவினார்.
2020ஆம் ஆண்டு கொரோனா காலகட்டத்தில் பொருளாதார ரீதியாக திரைத்திறையில் பாதிக்கப்பட்டு ஏழ்மை நிலையில் இருந்த குடும்பங்களுக்கு மளிகை சாமான்களை வாங்கிக் கொடுத்ததுடன் நிறைய உதவிகளை செய்துள்ளார். அது போல் 2022 ஆம் ஆண்டு வறுமையில் லைட்மேன்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் உதவுவதற்காக இலவசமாக கச்சேரியை நடத்தி கொடுத்தார்.
எனவே அவரை பற்றி அவதூறாக பேசுவதற்கு முன்பு அவர் என்ன நன்மைகளை செய்தார் என்பதை தெரிந்து கொண்டு பேசுங்கள் என கதீஜா தெரிவித்துள்ளார். சென்னையில் இசைக் கச்சேரி நடந்துமாறு ஏ.ஆர்.ரகுமானிடம் ரசிகர்கள் சமூகவலைதளங்களின் வாயிலாக கோரிக்கை விடுத்தனர். இதற்கு ரகுமானோ, சென்னையில் இசைக் கச்சேரிக்கு அனுமதி கிடைப்பது ரொம்ப கஷ்டம் என கூறியிருந்தார். இருந்தாலும் தொடர்ந்து ரசிகர்களின் கோரிக்கை எழுந்த நிலையில் தமிழக அரசிடம் ஏ.ஆர். ரகுமான் தரப்பினர் அனுமதி பெற்றனர்.
இதையடுத்து பனையூரில் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி இசைக் கச்சேரி நடத்துவதாக ஏ.ஆர். ரகுமான் திட்டமிட்டிருந்தார். ஆனால் அன்றைய தினம் சென்னையில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் இசை நிகழ்ச்சி பாதுகாப்பு கருதி ரத்து செய்யப்படுவதாக ஏ.ஆர்.ரகுமான் அறிவித்திருந்தார். மேலும் இந்த நிகழ்ச்சியை வேறு ஒரு நாளில் நடத்துவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிகழ்ச்சி நேற்றுமுன் தினம் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மறக்குமா நெஞ்சம் என பெயரிடப்பட்டது. இந்தமுறை மழை வந்தாலும் மழை வராவிட்டாலும் நிகழ்ச்சி நடைபெறும் என ரகுமான் கூறியிருந்த நிலையில் நேற்றைய தினம் திட்டமிட்டபடி இசை கச்சேரியை நடத்தினார்.
சென்னை ஓஎம்ஆர் சாலையில் உள்ள ஆதித்யராம் கிரவுண்டில் இந்த நிகழ்ச்சி நடந்தது. இதை காண 3 ஆயிரம் முதல் ரூ 25 ஆயிரம் வரை டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சியை காண ரசிகர்கள் பலர் ஆவலோடு வந்தனர். ஆனால் நிகழ்ச்சியை காண நிறைய பேர் வந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பல ரசிகர்கள் டிக்கெட் இருந்து நிகழ்ச்சியை காணவில்லை.
மூச்சு விட கூட முடியாத நிலையில் பலர் அசம்பாவிதம் நடந்துவிடுமோ என்ற அச்சத்தில் திரும்பி சென்றனர். அதாவது 20 ஆயிரம் இருக்கை போட்டுவிட்டு 40 ஆயிரம் டிக்கெட்டுகளை ஏற்பாட்டாளர்கள் விற்பனை செய்ததாக தெரிகிறது. மேலும் கூட்டத்தை பயன்படுத்தி கவுன்ட்டர்களிலும் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. மேலும் பலர் டிக்கெட் இல்லாமலேயே முண்டியடித்துக் கொண்டு உள்ளே வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
குழந்தைகளை பலர் அழைத்து வந்ததால் பெரும் சிரமம் அடைந்தனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை, கார் நிறுத்தும் இடம் சரியில்லை, மேலும் ஸ்பீக்கர்களும் சரியாக இல்லாததால் ரகுமான் பாடுவதே கேட்கவில்லை என்ற புகார் எழுந்தது. இதனால் டிக்கெட் இருந்தும் ரசிகர்கள் பலர் திரும்பி வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்த நிலையில்தான் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். ஏ.ஆர்.ரகுமானும் நிகழ்ச்சியை பார்க்க முடியாமல் திரும்பிச் சென்றவர்கள் டிக்கெட் நகலை அனுப்புங்கள் என கூறியதுடன் இப்போது நான் பலியாடு ஆகிறேன் என வருத்தமாக தெரிவித்திருந்தார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications