அனைத்து கட்சி வேட்பாளர்களுக்கும் வாழ்த்து.. ஆரோக்கிய அரசியலை முன்னெடுத்து குஷ்பு ட்வீட்!
சென்னை: அனைத்து கட்சிகளிலும் உள்ள வேட்பாளர்களுக்கு எனது வாழ்த்துகள் என குஷ்பு சுந்தர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
1980களில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை குஷ்பு பின்னர் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டார். இதையடுத்து திமுகவில் இணைந்து பணியாற்றினார். அக்கட்சியின் பிரச்சார பீரங்கியாக இருந்தார்.
பின்னர் சில பிரச்சினைகளால் காங்கிரஸ் கட்சிக்கு இடம்பெயர்ந்தார். இந்த கட்சியில் இருந்து கொண்டு பாஜக மற்றும் அக்கட்சி நிர்வாகிகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

காங்கிரஸ்
இந்த நிலையில் அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவுக்கு தாவினார். இதையடுத்து சில மாதங்களிலேயே பாஜக சார்பில் ஆயிரம் விளக்கு தொகுதியின் வேட்பாளராக களமிறக்கப்பட்டார். தொடர்ந்து அந்த தொகுதியில் களப்பணியாற்றினார்.

குஷ்புவுக்கு தோல்வி முகம்
இந்த நிலையில் இன்றைய தினம் வாக்குகள் எண்ணும் பணிகள் நடைபெறுகின்றன. முன்னதாக நேற்று முன் தினம் வெளியான கருத்து கணிப்புகளில் ஆயிரம் விளக்கு தொகுதியில் குஷ்புவுக்கு தோல்வி முகம் என்றே தெரிவிக்கப்பட்டது.

ட்வீட்
இதைத் தொடர்ந்து நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு வெளியிட்ட ஒரு ட்வீட்டால் அவர் தோல்வியை ஒப்புக் கொண்டார் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகிறார்கள். அவர் தனது ட்வீட்டில் நாளை மிக முக்கியமான நாளாகும். அனைத்து கட்சிகளையும் சேர்ந்த அனைத்து வேட்பாளர்களுக்கும் எனது வாழ்த்துகள். நாம் அனைவரும் நம்மால் இயன்ற அனைத்தையும் செய்திருந்தோம் என தெரிவித்திருந்தார்.

குஷ்புவுக்கு பதில்
இதற்கு பலர் குஷ்புவுக்கு பதில் அளித்துள்ளார்கள். அதில் ஒருவர் அக்கா நீங்கள் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள். உங்களுக்கு எனது வாழ்த்துகளும் பிரார்த்தனைகளும்! என தெரிவித்துள்ளார். மற்றொருவர் கள நிலவரத்தை நீங்கள் ஆராய்ந்துள்ளீர்கள் என நம்புகிறேன். இந்த தேர்தலுக்கு பிறகு அடுத்து எந்த கட்சிக்கு தாவுவது என்பது குறித்து நன்றாக கணக்கு போட்டிருப்பீர்கள் என்கிறார்கள்.

வலைஞர்
இன்னும் சிலரோ தான் ஜெயிக்க மாட்டோம் என நாசுக்காக உண்மை சொல்லி விட்டீர்கள் நன்றி என தெரிவித்துள்ளார்கள்.மேலும் பிஜேபி தமிழகத்தில் வெற்றி பெறும் என்று உங்கள் ஆழ்மனதில் யாரோ சென்று நம்ப வச்சிருக்காங்க என்கிறார் இந்த வலைஞர்.
-
850ஆக உயர்த்தப்படும் மக்களவை இடங்களின் எண்ணிக்கை! மத்திய அரசு சொன்ன மேட்டர்! எதிர்க்கட்சிகள் ஷாக் -
Delimitation: நீதிமன்றத்திற்கு கூட போக முடியாது! தமிழ்நாட்டுக்கு காத்திருக்கும் பெரிய ஆபத்து! -
வாழ வழி கேட்டால்.. இறுதி சடங்கு செய்ய ரூ.10 ஆயிரமாம்! பாஜக வாக்குறுதியால் ஷாக்! -
கொடநாட்டில் கைகட்டி நின்றது மறந்துடுச்சா விஜய்.. குறும்படம் காட்டிய சரத்குமார் -
“பியூஷ் கோயல் நாக்கை அடக்கிப் பேசணும்.. மரியாதை கொடுத்து மரியாதை வாங்கணும்”.. கொந்தளித்த ஸ்டாலின்! -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
வானதி சீனிவாசனுக்காக களத்தில் இறங்கிய கஸ்தூரி.. கோவை வடக்கை குறிவைத்து தீவிர பிரசாரம் -
"அம்மா குணமாகி வரணும்.. NDA வேட்பாளர்கள் ஜெயிக்கணும்" கோவையில் வானதி சீனிவாசன் இளைய மகன் வழிபாடு! -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
"மாநில நலனையும் பலி கொடுக்க துணிந்துவிட்டார் என்பதே எடப்பாடியின் அமைதிக்கான அர்த்தம்"- சு.வெங்கடேசன் -
“கொடூரமானது.. அரசியல் சாசன வரைவு திருத்தச் சட்டத்தை எதிர்த்து தோற்கடிக்க வேண்டும்”- ப.சிதம்பரம்












Click it and Unblock the Notifications