தீயாய் பரவும் கொரோனா.. வீட்டு தனிமையில் குஷ்பு! வேலூர் எம்எல்ஏவுக்கும் தொற்று உறுதி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகையும் பாஜக தேசிய செயற்குழு உறுப்பினருமான குஷ்புவுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதை அவர் டிவிட்டர் வாயிலாக உறுதிப்படுத்தினார். அது போல் வேலூர் தொகுதி எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து ட்விட்டர் பக்கத்தில் நடிகை குஷ்பு வெளியிட்ட பதிவில் கொரோனா இரு அலைகளில் தப்பிய நான் இறுதியாக 3ஆவது அலையில் சிக்கிவிட்டேன். எனக்கு கொரோனா உறுதியாகிவிட்டது. நேற்று மாலை வரை எனக்கு கொரோனா நெகட்டிவ் வந்தது.

ஆனால் தொடர்ந்து மூக்கில் சளி இருந்து கொண்டே இருந்தது. மீண்டும் ஒரு முறை சோதனை செய்ததில் கொரோனா உறுதியானது. அடுத்த 5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன்.

கொரோனா அறிகுறிகள்

கொரோனா அறிகுறிகள்

தனிமையில் இருப்பது வெறுப்பாக இருக்கிறது. எனவே என்னை ட்விட்டரில் தொடர்ந்து பொழுதை போக்க உதவுங்கள் என முக்கிய கோரிக்கையை வைத்துள்ள குஷ்பு, "உங்களுக்கு ஏதேனும் அறிகுறிகள் இருந்தால் போய் கொரோனா சோதனை மேற்கொள்ளுங்கள்" என்று அறிவுறுத்தியுள்ளார். இதையடுத்து விரைவில் குணமடைய வாழ்த்துகள் என ட்விட்டரில் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

குஷ்பு கொரோனா

குஷ்பு கொரோனா

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்த கொரோனாவுக்கு ஏற்கெனவே நடிகர்கள் சத்யராஜ், மோகன்பாபு, நடிகைகள் திரிஷா, ஈஷா குப்தா, அட்ரிஜா ஆடி ராய், மீனா, லட்சுமி மஞ்சு உள்ளிட்டோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது கொரோனாவுக்கு குஷ்புவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார்.

சுந்தர் சி கொரோனா

சுந்தர் சி கொரோனா

கடந்த 2-ஆவது அலையின் போது குஷ்புவின் கணவர் சுந்தர் சி-க்கு கொரோனா தொற்று பாதித்தது. அப்போது குஷ்பு, அவரது இரு மகள்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து சுந்தர் சி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். தனிமையில் இருக்கும் சுந்தர் சியை குஷ்பு வாசற்படியில் உட்கார்ந்து பார்த்து சென்ற புகைப்படத்தை அவர் வெளியிட்டிருந்து அது வைரலானது.

Recommended Video

    Cyprus நாட்டில் பரவும் புதிய Variant Coronavirus.. Deltacron குறித்து நிபுணர்கள் கூறுவது என்ன?
    மேலும் ஒரு எம்எல்ஏ

    மேலும் ஒரு எம்எல்ஏ

    அது போல் வேலூர் எம்எல்ஏ கார்த்திகேயனுக்கும் கொரோனா உறுதியாகிவிட்டது. கொரோனா 2ஆவது அலையின் போது பாதிக்கப்பட்ட இவர் தற்போது மூன்றாவது அலையிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 5 ஆம் தேதி பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரனுக்கும் அறந்தாங்கி எம்எல்ஏ எஸ்.டி. ராமச்சந்திரனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+