சூப்பர் பேரப்பிள்ளைகளும்.. சுப்ரீம் தாத்தாவும்.. பார்க்கவே செம ஹேப்பியா இருக்கே!
சென்னை: குழந்தைகளுடன் விளையாடுவது என்பது பெரிய கலை.. அவர்களுடன் பேசுவதே முதலில் மிகப் பெரிய கலைதான். அதில் கை தேர்ந்தவர்கள் தாத்தா பாட்டிகள்.
Recommended Video
காரணம், அப்பா அம்மாக்களை விட தாத்தா பாட்டிகளுக்குத்தான் மிகவும் பொறுமை உண்டு, நேரம் உண்டு, குழந்தைகளுக்கேற்ற நைச்சியமும் அவர்களிடம் மட்டுமே இருக்கும். அந்த வகையில் தனது குழந்தையிடம் தனது தந்தை விளையாடும் விதம் குறித்து சிலாகித்து நமக்கு எழுதி அனுப்பியுள்ளார் நமது வாசகர் இராஜசேகர் இராஜேந்திரன். அவரது கடிதம் இதோ:

வணக்கம், எனது பெயர் இராஜசேகர் இராஜேந்திரன். இங்கு kids are cool பகுதியில் எங்கள் வீட்டு குழந்தையை பற்றிய ஒரு சிறிய தொகுப்பு.
நான் குழந்தை என்றது 60வயதை கடந்த என்னுடைய அப்பாவை தான். பஸ் கண்டக்டராக இருந்து ஓய்வு பெற்றவர். நண்பர்களுடன் பொழுதை கழிக்கும் என் தந்தை, 144 தடை உத்தரவு காரணமாக வீட்டிலேயே இருக்கிறார். அம்மாவிற்கு உதவியாக எல்லா வீட்டு வேலைகளையும் செய்வார் (சமையல் உட்பட)
வீட்டில் 2 குழந்தை (அக்கா மகன் 3 வயது, எனது மகன் 2 மாதம்). அக்காவின் மகன் மிகவும் சுட்டி நாள்முழுவதும் ஏதாவது செய்து கொண்டோ அல்லது விளையாடிக்கொண்டே இருப்பான். ஆக இப்போது அவனையும் வீட்டிற்குள்ளையே வைத்து பூட்டியாகிவிட்டது.

என் அக்கா மகன் பக்கத்து வீட்டு குழந்தைகளோடு விளையாட அடம் பிடித்து அழ ஆரம்பிக்க, பேரனை மகிழ்ச்சி படுத்த தாத்தாவே (என் தந்தை) பேரனின் நண்பராகி போனார். ஆம் குழந்தையோடு சேர்ந்து அவரும் குழந்தையாகினார். உடைந்த பிலாஸ்டிக் கூடையை தலைக்கவசம் என்று தலையில் வைக்க அதனை மகிழ்ச்சியுடன் ஏற்று சிரிக்கும் அந்த மகிழ்ச்சியை பாருங்கள்.
பேரன் சோர்ந்து இருக்கும் பொழுது நடனமாடி உற்சாகப்படுத்துகிறார். அதுவும் இட்லி அவித்துக்கொண்டே. இன்று தாத்தா தான் தன் உலகம் என்று இருக்கிறான் பேரனும் என்று கூறியுள்ளார் இராஜேந்திரன்.












Click it and Unblock the Notifications