Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரூ 5 லட்சம் முதலீடு செய்ங்க.. ரூ 10 லட்சம் லாபம் பெறுங்க.. டபுள் டமாகா.. உடனே போஸ்ட் ஆபிஸ் போங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: போஸ்ட் ஆபிஸில் ரூ 5 லட்சம் முதலீடு செய்தால் ரூ 10 லட்சமாக திருப்பி பெறுவது எப்படி என்ற இரட்டிப்பு வருமான திட்டம் குறித்து என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

10 ரூபாய் சம்பாதித்தாலும் அதில் 2 ரூபாயையாவது சேர்த்து வைக்க வேண்டும். சேமிப்புதான் எதிர்காலத்திற்கு நல்லது. இந்த சேமிப்பு நமக்கு எத்தனையோ வகைகளில் கை கொடுக்கும்.

குழந்தைகளின் கல்வி, திருமண செலவு, மருத்துவச் செலவு, நகை வாங்குவது, வீடு வாங்குவது போன்ற செலவுக்கு அடிப்படையாக அமைவது சேமிப்புதான். நாம் வாங்கும் சம்பளத்தில் முதல் ஒற்றை ரூபாய் சேமிப்பாகத்தான் இருக்க வேண்டும்.

Kisan Vikas patra scheme gives you double damaka

அதிலும் பலர் இரட்டிப்பு வருமானம் என ஆசைவார்த்தை காட்டி மோசம் செய்யும் கும்பலிடம் பணத்தை கொடுத்துவிட்டு பஞ்சாயத்துக்கு போலீஸ் ஸ்டேஷன் வாசல் முன் நிற்கிறார்கள். அன்றாடம் ஒரு செய்தியாவது நிதி நிறுவன மோசடி குறித்து வருகிறது. ஆனாலும் மக்களுக்கு இரட்டிப்பு வருமானம், குறைந்த முதலீடு அதிக லாபம் , குறைந்த முதலீடு அதிக வட்டி போன்ற வார்த்தைகள் மீது அளவு கடந்த பற்று இருக்கத்தான் செய்கிறது.

மக்களின் சேமிப்பை பெருக்குவதற்குத்தான் மத்திய மாநில அரசுகள் சில திட்டங்களை கொண்டு வருகின்றன. வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், எல்ஐசி போன்றவற்றில் பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்து அதில் லாபத்தை பார்க்கலாம். அந்த வகையில் இரட்டிப்பு லாபத்திற்கு போஸ்ட் ஆபிஸில் உள்ள கிசான் விகாஸ் பத்திரம் என்ற திட்டம் பயனுள்ளதாக இருக்கும்.

இந்த திட்டத்தில் முதலீட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் இரட்டிப்புத் தொகையைப் பெறலாம். இந்த நிதியாண்டில் அஞ்சலத்தின் சிறுசேமிப்புத் திட்டத்தின் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் கிசான் விகாஸ் பத்திரம் மீதான வட்டி 7.2 சதவீதம் முதல 7.5 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். கிசான் விகாஸ் பத்திரம் என்பது நாட்டின் அரசாங்கத்தால் நடத்தப்படும் முதலீட்டு திட்டமாகும். இது அனைத்து போஸ்ட் ஆபிஸ்களிலும் பெரிய வங்கிகளிலும் இருக்கிறது. அங்கு முதலீடு செய்து பலனடையலாம். இந்த திட்டத்தில் ரூ 5 லட்சம் முதலீடு செய்தால் ஒரு ஆண்டில் 7.5 சதவீதம் வட்டி கிடைக்கும். இந்த திட்டத்தில் 115 மாதங்களுக்கு முதலீடு செய்யலாம்.

அதன் பிறகு முதிர்ச்சியில் ரூ 10 லட்சம் கிடைக்கும். கிசான் விகாஸ் பத்திரம் (கேவிபி KVP) திட்டம் விவசாயிகளுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகள் தங்கள் பணத்தை நீண்ட கால அடிப்படையில் சேமிக்க உதவுகிறது. குறைந்தபட்சமாக ரூ 1000 போடலாம். அதிகபட்சம் எவ்வளவு என்பதற்கான வரம்பு விதிக்கப்படவில்லை.

இந்த திட்டத்தில் யார் வேண்டுமானாலும் கணக்குத் தொடங்கலாம். தனியாக கணக்கு இருந்தால் 3 பெரியவர்கள் சேர்ந்து கூட்டுக் கணக்கு தொடங்கலாம். நாமினி வசதியும் உள்ளது. 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தங்கள் பெயரில் கிசான் விகாஸ் பத்திரா கணக்கை தொடங்கலாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+