மாநாட்டு மன்னன் கே.என்.நேரு! உதயநிதி ஸ்டாலின் சூட்டிய புதிய பட்டம்! திமுக இளைஞரணி மாநாடு நிதி?
சென்னை: அமைச்சரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேருவுக்கு மாநாட்டு மன்னன் என்ற புதிய அடைமொழி சூட்டியிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
சேலம் திமுக இளைஞரணி மாநாடுக்கு அமைச்சர் நேரு தான் பொறுப்பாளர் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், மாநாட்டுக்கான நிதி குறித்து உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்துள்ள தகவல் வருமாறு;

'மாநாட்டு மன்னன்' என்று போற்றப்படும் மாண்புமிகு அண்ணன் நேரு அவர்கள்தான் சேலம் இளைஞர் அணி மாநாட்டுக்கும் பொறுப்பாளர். "மாநாட்டுக்கான நிதியை நான் இப்போது அறிவிக்கப்போவதில்லை. மாநாட்டு பந்தலிலேயே அதை அறிவிப்பேன்" என்றார் நேரு அண்ணன்.
"நேரு அண்ணன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற அனைத்து மாநாடுகளுமே வெற்றிதான். அந்த வகையில், சேலம் மாநாடும் மிகப்பெரிய வெற்றிபெறும்" என்ற என் நம்பிகையை இளைஞர்களிடம் எடுத்துக்கூறி, "2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் நடைபெற உள்ள இந்த மாநாட்டை வெற்றிபெற வைப்பது செயல்வீரர்களான நம் இளைஞர்கள் ஒவ்வொருவர் கையிலும் தான் உள்ளது".
திருச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் முன்னிலையிலேயே அமைச்சர் நேருவை உதயநிதி இவ்வாறு புகழ்ந்து பேசியிருப்பது நேரு தரப்புக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. எப்படியும் திமுக இளைஞரணி மாநாடுக்கு அமைச்சர் நேரு கணிசமான பெரும் நிதியை அள்ளிக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோல் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மூர்த்தி, உள்ளிட்டோரும் தங்கள் பங்காக இளைஞரணி மாநாடுக்கு பெரும் தொகையை அள்ளிக் கொடுப்பார்கள் என எதிர்பார்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications