வேகமெடுக்கும் கோடநாடு கொலை விவகாரம்.. சிபிசிஐடி அதிரடி ஆக்ஷன்! 49 பேர் கொண்ட தனிப்படை அமைப்பு
சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், இதில் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு பங்களாவில் ஓய்வெடுப்பது வழக்கம்.
ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், அதன் பிறகு கோடநாடு பங்களாவுக்குப் பெரியளவில் யாரும் செல்லாமலேயே இருந்தனர்.

இதற்கிடையே கடந்த 2017ஆம் ஆண்டு கோடநாடு பங்களாவின் காவலாளி ஓம் பகதூர் படுகொலை செய்யப்பட்டார். மேலும், அங்கிருந்த பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக கனகராஜ், சயான், ஜெம்சீர் அலி, மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருப்பினும், இந்த வழக்கில் தொடர்புடைய பலரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களில் கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்தார். சயன், வாளையாறு மனோஜ் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை முதலில் போலீசார் விசாரித்து வந்தனர். அவர்கள், சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி, மருது அழகுராஜ் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடியிடம் மாற்ற டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதற்கிடையே 316 பேரிடம் பெற்ற வாக்குமூலங்கள் அடங்கிய 3600 பக்க விசாரணை அறிக்கையும் உதகை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இப்போது 49 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி எஸ்பி சி.எஸ்.மாதவன் தலைமையில் இந்தத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் சிறப்பாகச் செயல்படும் போலீசாரும் இந்த தனிப்படையில் இடம்பெற்றுள்ளனர். 2 டிஎஸ்பிகள் , 3 ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்கள் இந்த தனிப்படையில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை அடுத்து டிசம்பர் 2ஆம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில், அப்போது சிபிசிஐடி போலீசார் இந்த விசாரணைக் குழு குறித்த தகவல்களை விசாரணை நடைபெற்று வரும் உதகை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளனர்.
-
75 வருட வரலாற்றில் முதன்முறை..DSV vs IPS! திண்டுக்கல்லில் நேருக்குநேர் மோதும் திமுக-அதிமுக மா.செ.கள் -
ரொம்ப மன உளைச்சல்.. மேடையிலேயே பதவியை ராஜினாமா செய்த அதிமுக நிர்வாகி.. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு -
ஸ்டாலின் தான் சிறந்த CM வேட்பாளர்.. பின்னாலேயே துரத்தும் எடப்பாடி.. விஜய்க்கு அதிர்ச்சி! புதிய சர்வே -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
"ஈ அடிச்சான் காப்பி".. அதிமுக தேர்தல் அறிக்கையை காப்பியடித்த திமுக? எவ்வளவு ஒற்றுமை பாருங்க -
பாஜக சிம்ப்ளி வேஸ்ட்.. திருமாவளவன் பெஸ்ட்.. புயலை கிளப்பிய வால்பாறை அதிமுக வேட்பாளர் ஆடியோ -
நாங்க 10000..அவங்க 8000 தான்! அத்தைக்கு மீசை வச்சா சித்தப்பா மாதிரி இருக்கு! திண்டுக்கல்லார் ராக்ஸ்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications