வேகமெடுக்கும் கோடநாடு கொலை விவகாரம்.. சிபிசிஐடி அதிரடி ஆக்ஷன்! 49 பேர் கொண்ட தனிப்படை அமைப்பு
சென்னை: கோடநாடு கொலை மற்றும் கொள்ளை சம்பவம் குறித்து சிபிசிஐடி விசாரணையைத் தொடங்கியுள்ள நிலையில், இதில் முக்கிய நடவடிக்கை எடுத்துள்ளது.
முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு பங்களாவில் ஓய்வெடுப்பது வழக்கம்.
ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு உயிரிழந்த நிலையில், அதன் பிறகு கோடநாடு பங்களாவுக்குப் பெரியளவில் யாரும் செல்லாமலேயே இருந்தனர்.

இதற்கிடையே கடந்த 2017ஆம் ஆண்டு கோடநாடு பங்களாவின் காவலாளி ஓம் பகதூர் படுகொலை செய்யப்பட்டார். மேலும், அங்கிருந்த பல பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக கனகராஜ், சயான், ஜெம்சீர் அலி, மனோஜ் உள்ளிட்ட 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இருப்பினும், இந்த வழக்கில் தொடர்புடைய பலரும் அடுத்தடுத்து மர்மமான முறையில் சாலை விபத்துகளில் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களில் கனகராஜ் கார் விபத்தில் உயிரிழந்தார். சயன், வாளையாறு மனோஜ் உள்பட 10 போ் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை முதலில் போலீசார் விசாரித்து வந்தனர். அவர்கள், சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி, மருது அழகுராஜ் உள்ளிட்ட பலரிடம் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், இந்த வழக்கை சிபிசிஐடியிடம் மாற்ற டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டார். இதற்கிடையே 316 பேரிடம் பெற்ற வாக்குமூலங்கள் அடங்கிய 3600 பக்க விசாரணை அறிக்கையும் உதகை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இப்போது 49 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சிபிசிஐடி எஸ்பி சி.எஸ்.மாதவன் தலைமையில் இந்தத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அப்பகுதியில் சிறப்பாகச் செயல்படும் போலீசாரும் இந்த தனிப்படையில் இடம்பெற்றுள்ளனர். 2 டிஎஸ்பிகள் , 3 ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்கள் இந்த தனிப்படையில் இடம்பெற்றுள்ளனர்.
இந்த வழக்கு விசாரணை அடுத்து டிசம்பர் 2ஆம் தேதி விசாரணைக்கு வரும் நிலையில், அப்போது சிபிசிஐடி போலீசார் இந்த விசாரணைக் குழு குறித்த தகவல்களை விசாரணை நடைபெற்று வரும் உதகை அமர்வு நீதிமன்றத்தில் தெரிவிக்க உள்ளனர்.
-
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
காளியம்மாள் மயிலாடுதுறை தொகுதியில் போட்டி? அதிமுகவில் சேர்ந்ததும் எடப்பாடி போடும் கணக்கு.. பின்னணி -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
போக்குவரத்து ஊழியர்களின் முக்கிய கோரிக்கைகள்.. தமிழக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம் -
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை.. உடனே விசாரணை நடத்துங்க! தேசிய மகளிர் ஆணையத்தில் அதிமுக அவசர புகார் -
தமிழகத்தில் 3 முறை பிரச்சாரம்.. அதிமுக பேரே வாயில் வரலை! எடப்பாடிக்கு மோடியின் அரசியல் சிக்னல் என்ன? -
Election Exclusive: எடப்பாடி தன்னை ஜெயலலிதாவாக உணர்கிறார்! மாஜிக்களின் உள்குத்து பாலிடிக்ஸால் அதிருப்தி! களத்தில் மகன்? -
“என்னை கட்சிய விட்டு நீக்க பார்க்கிறீங்களா?”.. விஜய் பற்றிய கேள்விக்கு திண்டுக்கல் சீனிவாசன் ரிப்ளை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார்












Click it and Unblock the Notifications