வெயில் காலத்தில் மக்கள் அவதி... நகர்ப்புறத்தில் சலூன் கடைகளை திறக்க அனுமதி தருக -கொங்கு ஈஸ்வரன்
சென்னை: கோடை வெப்பத்தால் சிரமப்படுகின்ற மக்களுக்காக சலூன் கடைகள் நகர்ப்புறங்களிலும் திறக்கப்பட வேண்டும் என கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் கொங்கு ஈஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.
நகர்ப்புறத்தில் வாழும் மக்களின் நலன் கருதி சலூன் கடைகளை திறக்க அரசு உடனடியாக அனுமதி தர வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
சுயதொழில் செய்து வருகின்ற முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடந்த இரண்டு மாதங்களாக மிகவும் சிரமத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள். பல்வேறு தளர்வுகளை அரசு அறிவித்திருக்கிறது. அரசின் வருமானத்திற்காக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டாலும் மது பிரியர்கள் சிரமப்படுவார்கள் என்ற காரணத்தை அரசாங்கம் சுட்டிக்காட்டுகிறது.
அதேபோல தான் முடிதிருத்தும் நிலையங்கள் இயங்காததால் கடும் வெப்பம் நிலவும் இந்த கோடை காலத்தில் மக்கள் முடிதிருத்த வழி இல்லாமல் சிரமப்படுகிறார்கள். கிராமப்புறத்தில் இருக்கின்ற முடிதிருத்தும் கடைகளை திறக்கலாம் என்ற தளர்வை அரசு அறிவித்திருக்கிறது. கிராமப்புற முடிதிருத்தும் நிலையங்களுக்கும் நகர்ப்புற முடிதிருத்தும் நிலையங்களுக்கும் வேறுபாடு கிடையாது.
கிராமப்புறத்திலும் ஒரு சமயத்தில் ஒருவருக்கு தான் முடிதிருத்தும் தொழிலாளி முடி திருத்துகிறார். அதையே தான் நகர்ப்புறத்திலும் செய்கிறார்கள். அப்படி இருக்கும் போது நகர்ப்புற நிலையங்களை வித்தியாசமாக பார்க்க வேண்டிய அவசியம் கிடையாது. கிராமப்புறத்தில் கடைப்பிடிக்கின்ற கட்டுப்பாடுகளை எந்த குறையுமின்றி நகர்ப்புறத்திலும் கடைப்பிடிக்க முடியும்.
நகர்ப்புற முடிதிருத்தும் தொழிலாளர்களுடைய நலன் கருதியும், நகர்ப்புறத்தில் வாழ்கின்ற மக்களின் நலன் கருதியும் நகர்ப்புற முடிதிருத்தும் நிலையங்களை கட்டுப்பாடுகளோடு திறப்பதற்கு அரசு அனுமதிக்க வேண்டும்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications