அன்று லண்டனிலிருந்து ஆண்டார்கள்! இன்று டெல்லியிலிருந்து ஆள முயற்சிக்கிறார்கள்! சீறிய கொங்கு ஈஸ்வரன்!
சென்னை: சுதந்திரத்துக்கு முன்பாக லண்டனிலிருந்து நம்மை ஆட்சி செய்ததை போல் இப்போது டெல்லியிலிருந்து ஆட்சி செய்ய முயற்சிக்கிறார்கள் என மத்திய பாஜக அரசை சாடியிருக்கிறார் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சித் தலைவர் ஈஸ்வரன்.
Recommended Video
நீட் தேர்வை நீர்த்து போகச் செய்யும் வரை தமிழக அரசு ஆகச்சிறந்த அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்துக் கொண்டே இருக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
நீட் விலக்கு மசோதா மீதான விவாதத்தின் போது சட்டப்பேரவையில் இவ்வாறு தனது கருத்தை பதிவு செய்தார் கொங்கு ஈஸ்வரன்.

8 கோடி தமிழர்கள்
நீட் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்பது 8 கோடி தமிழர்களின் ஒருமித்த முடிவு என்றும் ஆனால் ஆளுநரை பொறுத்தவரை தனது கடிதத்தில், 'நான்' 'நான்' என்ற வார்த்தையை குறிப்பிட்டுள்ளதுடன் 8 கோடி தமிழர்களின் விருப்பத்தை நிராகரித்திருப்பது தமக்கு மிகுந்த மன வேதனையை தருவதாக கூறியிருக்கிறார். தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் மருத்துவர்கள் ஆகக் கூடாதா என ஆளுநருக்கு கேள்வி எழுப்பிய அவர், ஆளுநர் ரவியின் கடிதம் உள்நோக்கத்துடன் இருப்பதாக குற்றஞ்சாட்டினார்.

மாநில உரிமைகள்
மேலும், ஒரே நாடு, ஒரே ரேஷன் அட்டை, ஒரே பத்திரப்பதிவு, ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிடமாற்ற சட்டத்திருத்தம் என மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளில் மத்திய அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக குற்றஞ்சாட்டினார். இந்திய அளவில் மாநில உரிமைகளை காப்பாற்றக் கூடிய ஒரு அமைப்புக்கு தலைமையேற்க கூடிய தகுதி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு உள்ளதாக ஈஸ்வரன் தெரிவித்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி குஜராத் முதலமைச்சராக இருந்த போது மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர் என்றும் ஆனால் இன்று அவரே மாநில உரிமைகளை பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் எனவும் கொங்கு ஈஸ்வரன் சாடினார். சுதந்திரத்துக்கு முன்பாக லண்டனில் இருந்து இந்தியாவை ஆட்சி செய்யப்பட்டது போல் இப்போது டெல்லியிலிருந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆட்சி செய்யும் முயற்சி தொடங்கியிருப்பதாக மத்திய பாஜக அரசை சாடினார்.

அரசுப் பள்ளிகள்
மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஏழரை சதவீத இட ஒதுக்கீட்டை 15 சதவீதமாக அதிகரிக்க வேண்டும் என அரசை கேட்டுக்கொண்டார். சட்டமன்றத்தில் மீண்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ள நீட் விலக்கு மசோதாவுக்கு கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வரவேற்பும், ஆதரவும் அளிப்பதாக தெரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications