ஒரு பக்கம் வேலைக்கு ஆளில்லை! ஒரு பக்கம் வேலை கிடைக்கவில்லை! எல்லாம் மாறட்டும்! ஈஸ்வரன் மே 1 வாழ்த்து
சென்னை: உழைக்கும் வர்க்கத்தின் உரிமை குரல் ஓங்கி ஒலித்து உழைப்பாளர்களின் வாழ்வு மேம்பட இந்த மே தினத்தில் உறுதியேற்போம் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஈஸ்வரன் விடுத்துள்ள மே தினம் வாழ்த்து வருமாறு;
''காலம் மாற மாற காலத்திற்கு ஏற்ற மாற்றங்களையும், மேம்பாடுகளையும் பெற்று எல்லா மக்களோடும் சரி சமமான வாழ்வாதாரத்தை பெற வாழ்த்துக்கள்.

வேலைக்கு ஆள் இல்லை என்று ஒரு பகுதியும் வேலை கிடைக்கவில்லை என்று மற்றொரு பகுதியும் வேதனைப்படும் சூழல் நிலவுகிறது.
சரியான தொடர்புகளை ஏற்படுத்தி படித்த படிப்பிற்குரிய வேலையை அனைவரும் பெற உறுதி எடுத்து உழைப்போம்.
முதலீடுகளும், தொழிற்சாலைகளும் வெறும் வேலை வாய்ப்பை உருவாக்குவதில்லாமல் இந்த மண்ணின் மைந்தர்களான தமிழர்களுக்கு வேலை கொடுக்கக் கூடியதாக அமைய முயற்சிப்போம்.
படிக்கும் போதே தொழிற்சாலைகளுக்கு சென்று பயிற்சி என்ற தமிழக அரசின் அறிவிப்பை முறையாக செயல்படுத்தி பயன்பெறுவோம்.
அனைவருடைய உழைப்பும் நோக்கமும் அவரவருக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் மகிழ்ச்சி அளிப்பதாக அமைய இந்த மே தினத்தில் அனைவரையும் வாழ்த்துகிறோம்.''












Click it and Unblock the Notifications