எப்படி இருந்த பங்காளி நீ! கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம்.. இப்போ எப்படி இருக்கு பாருங்க!
சென்னை: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டுள்ள நிலையில் வெளியூர்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் அங்கிருந்தே கிளம்ப வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால், கோயம்பேட்டில் உள்ள ஆம்னி பேருந்துகள் நிலையம் ஆள் அரவமின்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
வெளியூர் செல்வது என்றாலே அடுத்து பயணிகள் நினைவுக்கு வருவது கோயம்பேடு பேருந்து நிலையம் தான். பயணிகள் பலரும் சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து அடித்து பிடித்து கோயம்பேடு பஸ் ஸ்டாண்டிற்கு வந்து மதுரை, திருச்சி, நெல்லை என தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் பேருந்தை பிடித்து பயணிப்பார்கள். விடுமுறை காலங்களில் திருவிழா கூட்டம் போல பேருந்து நிலையம் காணப்படும்.

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் விரைவு பேருந்துகள் செல்லும் நுழைவு வாயிலுக்கு செல்லும் சாலையின் எதிர்திசையில் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கான நிலையம் இருந்தது. சொகுசான பயணம், சரியான நேரத்திற்கு ஊருக்கு போய்விடலாம் என்பதால் கட்டணம் சற்று கூடுதலாக இருந்தாலும் பயணிகள் பலரும் ஆம்னி பேருந்துகளில் செல்ல விருப்பப்படுகிறார்கள். இதனால் கோயம்பேடு அரசு பேருந்துகளுக்கு நிகராக ஆம்னி பேருந்து நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதும்.
கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலைய வாசலில் இருந்தே பயணிகள் லக்கேஜ்களுடன் செல்வதை பார்க்கலாம். வண்ண வண்ண நிறங்களில் அலங்கார விளக்குகளுடன் காதை பிளக்கும் ஹார்ன் சத்தத்துடன் ஆம்னி பேருந்துகளும் வெளியே செல்வதும் வருவதும் என எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும். அதுவும் மாலை 6 மணியில் இருந்து இரவு 10 மணி வரை வரிசையாக ஆம்னி பேருந்துகள் செல்வதை பார்க்கலாம். ஆம்னி பேருந்து நிலையத்தை சுற்றிலும் உள்ள கடைகளிலும் வியாபாரம் களைகட்டும்.
தற்போது நகரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால்,சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தை அரசு திறந்துள்ளது. அரசு பேருந்துகள் முதல் ஆம்னி பேருந்துகள் வரை தென் மாவட்டங்களுக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் இங்கிருந்தே இயக்கப்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தற்போது ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்படுகிறது.

இதனால், எப்போதும் பரபரப்பாக காட்சி அளித்துக் கொண்டு இருந்த ஆம்னி பேருந்து நிலையம் தற்போது ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. லக்கேஜ்களை ஏற்றுவதும்.. பஸ்களை கழுவதும் என பகல் நேரங்களில் கூட பரபரப்பாக காட்சி அளித்த பேருந்து நிலையம், இரவு நேரத்தில் கூட ஆளின்றி கிரிக்கெட் மைதானம் போல காட்சி அளிக்கிறது. ஒன்றிரண்டு காலி பேருந்துகள் மட்டுமே உள்ளே நிற்கின்றன.
சாதாரண நாட்களில் கூட இரவு நேரத்தில் திரும்பும் பக்கமெல்லாம் வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டமாக காணப்படும். ஆனால் தற்போது அந்த பகுதியே மயான அமைதியாக காட்சியளிக்கிறது. எப்போதும் பரபரப்பாக இருந்த ஆம்னி பேருந்து நிலையத்தை பார்த்த அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் தற்போது வாழ்ந்து கெட்டவரை பார்ப்பது போல வருத்தத்துடன் பார்த்து செல்கிறார்கள்..
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications