கோயம்பேடு வா.. தாம்பரம் காதலியிடம் இருந்து வந்த அழைப்பு.. காதலனுக்கு கனவிலும் நினைக்காத சம்பவம்
சென்னை: சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் கடலூர் மாவட்டம், முஷ்ணம் பகுதியை சேர்ந்தவர் சசிகுமார் என்பவர் படித்து வருகிறார். தாம்பரத்தைச் சேர்ந்த ரித்திகா என்ற ரித்து என்ற பெண்ணை இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்துள்ளார். இந்நிலையில் காதலிக்கும்போது சசிகுமார் பணம் கொடுத்ததாக கூறப்படுகிறது. கொடுத்த பணத்தை திருப்பி கேட்டதால் கல்லூரி மாணவரை நண்பர்களை வைத்து காதலிசெய்த சம்பவம் அதிர வைத்துள்ளது.
இன்றைக்கு கண்டதும் காதல், இன்ஸ்டாவில் பழகினால் காதல் என்று காதலிப்பதற்கு வரைமுறையே கிடையாது. இனக்கவர்ச்சியை காதல் என்று தவறாக புரிந்து கொண்டு இன்றைய தலைமுறை இளைஞர்கள், பெண்கள் வாழ்க்கையில் தவறான முடிவெடுக்கிறார்கள். அவர்கள் எடுக்கும் முடிவு எதிர்காலத்தை காலி செய்கிறது. ஒரு இளம் ஜோடி காதல் என்ற பெயரில் பழகி உள்ளது. அதில் காதலனுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை இந்த பதிவில் பார்ப்போம்.

கடலூர் மாவட்டம், முஷ்ணம் பகுதியை சேர்ந்த 19 வயதாகும் சசிகுமார் என்பவர் சென்னை மதுரவாயல் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சசிகுமார், 'இன்ஸ்டாகிராம்' மூலம் தாம்பரத்தைச் சேர்ந்த ரித்திகா என்ற 21 வயதாகும் ரித்து என்ற பெண்ணிடம் பழகி உள்ளார். இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி உள்ளது.
காதலியான பின்னர் ரித்திகா, பல்வேறு காரணங்களை சொல்லி சசிகுமாரிடம் இருந்து அடிக்கடி சிறிது சிறிதாக பணம் பெற்றதாக தெரிகிறது. இதுவரை மொத்தம் ரூ.1 லட்சத்து 87 ஆயிரம் வரை ரித்திகாவுக்கு சசிகுமார் கொடுத்துள்ளராம். ஒரு கட்டத்தில் ரித்திகா, வேறொரு வாலிபரை காதலிப்பது சசிகுமாருக்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி ரித்திகாவிடம் கேட்டார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
கல்லூரி கட்டணம் செலுத்த வைத்திருந்த பணத்தை காதலியிடம் கொடுத்துவிட்டதால் கல்லூரி கட்டணம் செலுத்த முடியாமல் பகுதி நேரமாக சசிகுமார் வேலைக்கு சென்று வந்திருக்கிறார். மேலும் கல்லூரி கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால் காதலிக்கும்போது தான் கொடுத்த பணத்தை திருப்பி தரும்படி ரித்திகாவிடம், சசிகுமார் கேட்டார்.
இதையடுத்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு சசிகுமாரை தொடர்பு கொண்ட ரித்திகா, கோயம்பேடு வருமாறு அழைத்தார். அதன்படி கோயம்பேடு வந்த சசிகுமாரை காரில் தாம்பரம் கடத்திச்சென்றாராம். அங்கு அவரது தோழி மற்றும் நண்பர்கள் என மேலும் 3 பேருடன் சேர்ந்து சசிகுமாரை சரமாரியாக அடித்து உதைத்தார்களாம். இதில் காயம் அடைந்த சசிகுமார், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து ரித்திகா, அவரது தோழி தர்ஷினி (19), நண்பர்களான சஞ்சய் (22), சரவணன் (20) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கார், விலை உயர்ந்த செல்போன் பறிமுதல் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டது.
-
தாம்பரம் ட்விஸ்ட்.. ஸ்டாலின் போட்ட ‘மாஸ்டர் பிளான்’.. எதிர்ப்பை ஆதரவாக்கிய திமுகவின் தேர்தல் வித்தை! -
30 வருடமாக "டிமிக்கி" கொடுத்த பாகிஸ்தான்.. உடனே ரூ.32,459 கோடி கடனை தர வேண்டும்.. UAE விதித்த கெடு -
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்














Click it and Unblock the Notifications