உயிருக்கு மதிப்பளியுங்கள்.. ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம்..சொல்வது எல்.முருகன்
சென்னை: மக்களின் உயிருக்கு மதிப்பளித்து ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறந்து பயன்படுத்தலாம் என்று தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
Recommended Video
சென்னை தி. நகரில் உள்ள தமிழ்நாடு பா.ஜ.க தலைமையகமான கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது.இதில் இருந்து மக்களைக் காப்பதற்காக தமிழ்நாடு பா.ஜ.க சார்பில் 'கொரோனா சேவை இயக்கம் ' என்பது மக்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது.

முன்கள பணியாளர்கள் அர்ப்பணிப்பு
பொதுமக்கள் 044 43114061 மற்றும் 044 42691836 ஆகிய எண்களை தொடர்புகொண்டு கொரோனா பற்றிய ஆலோசனைகளை பெறலாம்.மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் இந்த இயக்கத்தின் மூலம் செய்யப்படும். இந்த கொரோனா காலத்தில் முன்கள பணியாளர்களின் அர்ப்பணிப்பையும் அவர்களின் உழைப்பையும் நிச்சயமாக நாம் மதிக்க வேண்டும்.

ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை
ஆகஸ்ட் மாதத்துக்குள் 30 கோடி பேருக்கு தடுப்பு செலுத்தப்படும் என்று மத்திய அரசு கூறியது. இதுவரை 13 கோடியே 55 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதே சராசரியில் சென்றால் 45 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்படும். ஆக்ஸிஜனை பொறுத்தவரையில் உற்பத்திக்கான தட்டுப்பாடு இல்லை. ஆனால் வெகு தொலைவிற்கு அதனை எடுத்துச் செல்வதே சவாலான விஷயமாக உள்ளது.

உண்மைக்கு புறம்பான செய்திகள்
உலகத்திலேயே முதன் முறையாக இந்தியாவில்தான் ரயில்களிலும், இராணுவ விமானங்களிலும் ஆக்சிஜன்எடுத்து செல்லப்படுகிறது. மேலும் இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கலன்கள் அமைக்கப்பட உள்ளன. ஆனால் எதிர்க்கட்சிகள் ஆக்சிஜன் பற்றாக்குறை, மருந்து பற்றாக்குறை என உண்மைக்குப் புறம்பான செய்திகளை கூறி வருகின்றன.

ஸ்டெர்லைட் ஆலை திறக்கலாம்
குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் அதிகப்படியான ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் அந்த ஆக்சிஜனை கொண்டு செல்வது சவாலாக உள்ளது. ஆனாலும் டெல்லியில் ஆக்சிஐன் இல்லாத குறிப்பிட்ட சில மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டு விட்டது. மக்களின் உயிருக்கு மதிப்பளித்து ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறந்து பயன்படுத்தலாம். அங்குள்ள மக்களுக்கும் நிச்சயமாக ஆக்ஸிஜன் தேவைப்படும் என்று எல்.முருகன் தெரிவித்தார்.
-
தங்கம் விலை பவுனுக்கு ரூ.13 ஆயிரம் சரிவு.. இன்னும் ரூ.14 ஆயிரம் வரை குறைய வாய்ப்பு -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை












Click it and Unblock the Notifications