கிரைய பத்திரம்.. பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்யணுமா.. அந்த மிஸ்டேக் வந்துவிட்டதா.. கவலையை விடுங்க
சென்னை: பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? பத்திரத்தில் பிழை ஏற்பட்டுவிட்டால், அதை திருத்த முடியுமா?
பொதுமக்களின் வசதிக்காக, பத்திரப்பதிவு துறையானது, பல்வேறு வசதிகளையும், அறிவிப்புகளையும் செய்து வருகிறது... குறிப்பாக, தமிழகத்திலுள்ள அனைத்து சார்பதிவாளர் அலுவலகப் பணிகள் அனைத்தும் தற்போது ஆன்லைன் மயமாகிவிட்டதால், பத்திரப்பதிவிற்காக வரும் பொதுமக்கள் நீண்டநேரம் காத்திருக்க தேவையில்லை.

ஜஸ்ட் 15 நிமிடத்திற்குள்ளேயே பதிவு பணிகள் முடிவடைந்து செல்லும் வழியாக சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.. பத்திரப்பதிவிற்கு வரும்போது, பொதுமக்கள் கையில் பணம் எடுத்துவரவும் தேவையில்லை என்றெல்லாம் அறிவிப்புகள் வெளியாகின.
எழுத்தர்கள்: அதேபோல, ஆவண எழுத்தர்கள், இடைத்தரகர்கள் ஆகியோர் சார்-பதிவாளர், பதிவாளர் அலுவலகங்களுக்குள் உள்ளே வரக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
காரணம், எல்லாமே இப்போது ஆன்லைன் பதிவு செய்யப்படுவதால், இடத்தை வாங்குபவரும், விற்பவரும் பணத்தை பத்திரப்பதிவு அலுவலத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. மற்றொருபுறம், பத்திரப்பதிவு துறையால் வழங்கப்படும் ஆவணங்களில் மாற்றங்களை செய்து பலர் மோசடியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.. இதனால் இவைகளுக்கெல்லாம் ஒரு கடிவாளம் போடவே, இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளது..
சரி, பத்திரத்தில் உள்ள பெயரை நம்மால் மாற்ற முடியுமா? இந்த பெயர் மாற்றம் செய்வதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? முதலில் சார் பதிவாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும். அல்லது எண் 1,2 இணைய சார் பதிவாளர் அலுவலத்துக்கு செல்ல வேண்டும். அதாவது சொத்தின் உரிமையாளர் யாரோ, அவர்தான் நேரில் செல்ல வேண்டுடும்.. எந்த முறையில் பெயர் மாற்றம் செய்ய போகிறீர்கள் என்பதை தெரிவிக்க வேண்டும்..
பத்திரப்பதிவு: சொத்தின் உரிமையாளர் பெயரில் பட்டா மற்றும் பத்திரம் ஏதாவது இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பிறகு, நிலப்பதிவேடு அலுவலகத்திற்கு சென்று, இதற்குரிய கட்டணத்தை செலுத்தவேண்டும்..
இதற்கு முத்திரைத்தாள் மற்றும் பதிவு கட்டணங்கள் கட்டினால் போதும். பிறகு, புதிய பெயரை பற்றின சுயசான்றளிக்கப்பட்ட சான்றுகளை அந்த அலுவலகத்தில் தர வேண்டும். நீங்கள் தந்த அத்தனை சான்றுகளையும் சரிபார்த்த பிறகு, நிலப்பதிவேடு அலுவலகத்தின் உரிமை துறையானது, பத்திரத்தில் பெயர் மாற்றுவதற்கான முன்மொழிவு குறித்து விசாரணையை தொடங்கும்..
மோசடிகள்: இது எதற்காகவென்றால், இந்த பெயர் மாற்றத்தின் பெயரில், மோசடி எதுவும் நடந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக இப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அனைத்துமே சட்டரீதியாக சரிபார்த்த பிறகே, பத்திர பதிவுகளில் பெயர் புதுப்பிக்கப்படும்.. இறுதியில், பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள், சம்பந்தப்பட்டவருக்கு வழங்கப்பட்டுவிடும்.
அதேபோல, பத்திரத்தில் ஏதாவது பிழை இருந்தாலும் திருத்திக்கொள்ளலாம்.. ஆவணங்களை தயார் செய்யும்போது, இப்படியான பிழைகள் தெரியாமல்வந்துவிடும்.. தட்டச்சு செய்யும்போதும் பிழை வரலாம்.. அல்லது, பழைய எண், புதிய எண் போன்ற நம்பர் சம்பந்தப்பட்ட விவரங்களை குறிப்பிடும்போதும் பிழை வரலாம். ஆனால், எந்த பிழையாக இருந்தாலும், அதை உடனே சரி செய்து கொள்ள வேண்டும்.
இல்லாவிட்டால், பத்திரத்தின் சொத்து விவரமானது, பட்டாவுடன் பக்காவாக பொருந்தாது. மாறுபாடுடன் காணப்பட்டால், சொத்தை எப்போதாவது விற்க நேர்ந்தாலும் சிக்கல் வந்துவிடும்.
பிழை திருத்தம்: அதனால், பிழையை திருத்தம் செய்ய பிழைகளை திருத்த சார் - பதிவாளர் அலுவலகத்தை அணுகினால், சொத்து மாறாத நிலையில், குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படும். உங்களுக்கு விற்பனை செய்து, ஆவணம் ஏற்படுத்தி தரும் அதே நபரால், பிழை திருத்தப்பட்டு தரப்படும் ஆவணம்தான் "பிழை திருத்தல் பத்திரம்" (Rectification Deed) என்பார்கள்.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications