மறைந்த சோ ராமசாமியின் மனைவி செளந்தரா காலமானார்! நாளை இறுதிச் சடங்கு.. பிரபலங்கள் இரங்கல்
சென்னை: நடிகர் அரசியல் விமர்சகர் துக்ளக் ஆசிரியர் என பன்முகங்கள் கொண்ட மறைந்த சோ ராமசாமியின் மனைவி செளந்தரா ராமசாமி சென்னையில் தனது 84 ஆவது வயதில் வயது மூப்பு காரணமாக காலமானார்.
தமிழ் திரையுலகில் காமெடி நடிகராக அறிமுகமாகி பல்வேறு அரசியல் நையாண்டி வசனங்கள் பேசி பிரபலமானவர் சோ என்ற ராமசாமி.

தொடர்ந்து அரசியல் விமர்சகராக உருவெடுத்ததோடு நாடகத் துறையிலும் மிகப்பெரிய ஜாம்பவானாக வலம் வந்தார். அரசியல்வாதிகளையும் அரசியல் நிகழ்வுகளையும் மிகக் கடுமையாக அதே நேரத்தில் காமெடியாக விமர்சிப்பதன் மூலம் பிரபலமான அவர் துக்ளக் என்ற அரசியல் விமர்சன பத்திரிக்கையும் நடத்தி வந்தார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலருடன் நெருக்கமாக இருந்த அவர், பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2016 ஆம் ஆண்டு சோ ராமசாமி உடல் நலக்குறைவால் காலமானார். இந்த நிலையில் அவரது மனைவி செளந்தரா சோ ராமசாமி சென்னையில் தனது மகன் ஸ்ரீ ராம், மகள் சிந்துஜா உடன் வசித்து வந்தார். இந்த நிலையில் உடல் நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக ஆகஸ்ட் 19ஆம் தேதி இரவு சௌந்தர ராமசாமி காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
இதை அடுத்து அவரது உடல் நாளை நல்லடக்கம் செய்யப்பட இருக்கிறது. அவரது மறைவுக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications