வெண்கலத்தில் மின்னிய சூரியன்.. அறிவாலயத்தில் கருணாநிதி சிலையை திறந்து வைத்தார் சோனியா!
சென்னை திமுக நிறுவனர் அண்ணா அறிவாலயத்தில் அண்ணா மற்றும் மறைத்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை தற்போது திறக்கப்பட்டு இருக்கிறது.
Recommended Video

சென்னை திமுக நிறுவனர் அண்ணா அறிவாலயத்தில் அண்ணா மற்றும் மறைத்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை தற்போது திறக்கப்பட்டு இருக்கிறது.
டெல்லி: சென்னை திமுக நிறுவனர் அண்ணா அறிவாலயத்தில் அண்ணா மற்றும் மறைத்த திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை தற்போது திறக்கப்பட்டு இருக்கிறது. காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி சிலைகளை திறந்து வைத்தார்.
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதிக்கு பிரமாண்டமான முழு உருவ சிலை அமைக்கப்பட்டு உள்ளது. கருணாநிதி சிலையுடன் தி.மு.க. நிறுவனர் அண்ணாவுக்கும் அவருக்கு அருகே சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த விழாவில் பல முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

கருணாநிதி
கருணாநிதி சிலை முழுக்க முழுக்க வெண்கலத்தால் செய்யப்பட்டது. இதை மிகவும் தத்ரூபமாக வடிவமைத்து இருக்கிறார்கள். இந்த சிலையை வடிவமைக்க இரண்டு வாரம் ஆனது. பார்க்க அப்படியே தத்ரூபமாக கருணாநிதி போலவே இந்த சிலை வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

யார் செய்தது
இந்த சிலையை திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரைச் சேர்ந்த சிற்பி தீனதயாளன் வடிவமைத்தார். இவர் இதற்கு முன்பே தலைவர்களுக்கு சிலை வடிவமைத்துக் கொடுத்தவர். சில கோவில் சிலைகளையும் வடிவமைத்துள்ளார். இவரின் கைவண்ணத்தில்தான் இந்த சிலை உருவாக்கப்பட்டுள்ளது.

பல தலைவர்கள்
அகில இந்திய கட்சித் தலைவர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கலந்து கொள்ள இருக்கிறார்.
|
பலர் கலந்து கொண்டனர்
நடிகர்கள் ரஜினிகாந்த், வடிவேலு, நாசர், பிரபு, இந்தி நடிகர் சத்ருகன் சின்ஹா உள்ளிட்டோர் விழா விழாவில் கலந்து கொண்டுள்ளனர். இதனால் விழா நடக்கும் ஓய்.எம்.சி.ஏ மைதானம் களைகட்டியது. அங்கு இதனால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

காங்கிரஸ் தலைவர்
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் சோனியா காந்தி விழாவில் கலந்து கொண்டு சிலையை திறந்து வைத்தார். காங்கிரஸ் தலைவர் ராகுலும் விழாவில் கலந்து கொண்டார். அதேபோல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள் பலர் விழாவில் கலந்து கொண்டனர்.

ஆயிரக்கணக்கான தொண்டர்கள்
இந்த விழாவில் ஆயிரக்கணக்காக திமுக தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு இருக்கிறார்கள். காலையில் இருந்து கருணாநிதியின் சிலையை பார்க்க வேண்டும் என்று இவர்கள் அண்ணா அறிவாலயம் முன் காத்திருந்தும் குறிப்பிடத்தக்கது.

சிலை திறக்கப்பட்டது
சோனியா காந்தி இரண்டு சிலைகளையும் திறந்து வைத்தார். இந்த சிலை திறக்கப்பட்ட போது அங்கிருந்த திமுக தொண்டர்கள் திமுக, கலைஞர், கருணாநிதி என்று கோஷம் எழுப்பினார்கள். இந்த தலைவர்கள் எல்லோரும் கலந்து கொள்ளும் விழா இன்னும் சற்று நேரத்தில் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடக்கிறது.
-
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications