சங்கல்ப்ப பூஜை.. லதா ரஜினிகாந்த் எடுக்கப்போகும் அதிரடி முடிவு? உன்னிப்பாக கவனிக்கும் கட்சிகள்!
டெல்லி: டெல்லி-உத்தரபிரதேச எல்லையில் உள்ள காசிப்பூர் பகுதியில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டுள்ளதால் பதற்றம் நிலவி வருகிறது.
Recommended Video
டெல்லியை போன்று இங்கும் சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதில் உத்தரபிரதேச அரசு உறுதியாக உள்ளதால் அவர்களை அகற்ற முடிவு செய்து வருகிறது.
பாரதிய கிசான் யூனியன் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகைத் அங்கு வந்து விவசாயிகளுடன் முகாமிட்டு உள்ளார். சரணடைய மறுத்து வரும் அவர், குடியரசு தின வன்முறை குறித்து உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு விசாரிக்க வேண்டும் என கூறியுள்ளார்.
அண்ணாத்த சூட்டிங்
நடிகர் ரஜினிகாந்த் டிசம்பர் மாதம் கட்சி ஆரம்பிக்கப் போவதாக அறிவித்திருந்தார். கட்சி துவங்குவதற்கு முன்னதாக தான் நடித்துக்கொண்டிருக்கும் அண்ணாத்த படத்தை நடித்து முடித்துவிட்டு கட்சியை துவங்கலாம் என்று எண்ணியபோது அவருடைய உடல் நலம் பாதிக்கப்பட்டது. ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ரஜினிகாந்த் திடீர் முடிவு
மருத்துவர்கள் ரஜினிகாந்திடம் ரத்த அழுத்தம் சீராக இல்லாததால் உங்கள் உடல்நலத்தை கவனித்துக் கொள்ளவேண்டும் என அறிவுறுத்தினர். அதனை முன்னிட்டு நடிகர் ரஜினிகாந்த் தான் அரசியலில் ஈடுபடப் போவதில்லை என திட்டவட்டமாக கூறிவிட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தனர்.
லதா ரஜினிகாந்த் கட்சி
இந்நிலையில் ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த், பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் ஆலயத்திற்கு வந்து சிறப்பு தரிசனம் செய்தார். இதில் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் ஆரம்பிக்கப் போகும் புது கட்சி வெற்றி அடைய வேண்டுமென சிறப்பு பூஜை செய்யப்பட்டு சங்கல்பம் செய்ததாக ஒரு தகவல் உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் லதா ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்கப் போவதாகவும், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
காமாட்சி அம்மன் தரிசனம்
இந்த தகவல் எந்த அளவு உண்மை, சவுந்தர்யா ரஜினிகாந்த், காமாட்சி அம்மனை வழக்கம்போல தரிசனம் செய்துவிட்டு போக வந்தாரா, அல்லது கட்சிக்காக சிறப்பு பிரார்த்தனை செய்ய வந்தாரா என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும். ஒருவேளை லதா ரஜினிகாந்த் கட்சி துவங்கினால் திமுக, அதிமுகவைவிட அர்ஜுன மூர்த்தி கட்சிக்குத்தான் ஆபத்து என்பது மட்டும் உண்மை.
அர்ஜுன மூர்த்தி கட்சி
ரஜினிகாந்த்துக்கு பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. இதை ஒருமுகப்படுத்திவிட வேண்டும், வேறு கட்சிகளுக்கு அவர்கள் திரும்பிவிட கூடாது என்பதுதான் அர்ஜுன மூர்த்தி நோக்கம். லதா ஒருவேளை கட்சி துவங்கினால், ரஜினி ரசிகர்கள் கண்டிப்பாக லதா பக்கம்தான் கணிசமாக திரும்புவார்கள். இது அர்ஜுன மூர்த்தியின் ஆரம்பிக்கப்படாத கட்சிக்குத்தான் வேட்டு வைக்கும். ஆனால் சொல்ல முடியாது. ஒருவேளை அர்ஜுன மூர்த்தியே கூட லதா கட்சி துவங்கினால் 'ஆலோசகர்' பதவியில் அமர வைக்கப்படலாம். பார்ப்போம்.. இன்னும் என்னென்ன நடக்கிறது என்பதை.