ரேகிங் கொடுமை.. ஊருக்கே வந்துடறேன்ப்பான்னு சொன்ன சட்டக் கல்லூரி மாணவி தற்கொலை
செங்கல்பட்டு: தஞ்சாவூரில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்த சட்டக் கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
செங்கல்பட்டு பகுதியில் இயங்கி வரும் அரசு சட்டக் கல்லூரியில் வெளி மாவட்டங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர்.
இந்நிலையில் 2-ம் ஆண்டு பயின்று வரும் தஞ்சாவூர் மாவட்டம், திருவாதூர் கிராமத்தை சேர்ந்த சிவபிரகாசம் என்பரவது மகள் கவிப்பிரியா (19) என்பவர் சட்டக்கல்லூரி விடுதியில் தனது அறையில் தங்கியிருந்தார்.

விடுதி
இந்த நிலையில் அவருடன் விடுதியில் தங்கியிருந்த மாணவிகள் கவிப்பிரியாவை தொடர்ந்து ராகிங் செய்து வந்ததாக தெரிகிறது. இதை சகித்துக் கொள்ள முடியாத கவிப்பிரியா தனது தந்தைக்கு போன் செய்துள்ளார். அப்போது தன்னை மாணவிகள் ராகிங் செய்கிறார்கள்.

ஊருக்கு வருகிறேன்
எனக்கு இங்கு படிக்க பிடிக்கவில்லை. அதனால் நான் ஊருக்கு வந்துவிடுகிறேன் என கூறிவிட்டு ஊருக்கு புறப்பட ஆயத்தமாகினார். ஆனால் இவர் ஊருக்கு செல்வதை அறிந்த மாணவி ஒருவர், இன்னும் ஓரிரு நாட்களில் தேர்வு நடக்கவுள்ளது. தேர்வு முடிந்ததும் ஊருக்கும் செல்லலாம் என சமாதானம் செய்துள்ளார்.

கவிப்பிரியா
அவரது பேச்சை கேட்ட கவிப்பிரியா மீண்டும் விடுதிக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்திருந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவிகள் அவரை உடனடியாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

உடல் பிரேத பரிசோதனை
அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில் கவிப்பிரியா இறந்தார். மாணவியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது அதனை தொடர்ந்து கவி பிரியாவின் உடலை பெற்றோர்களிடம் ஒப்படைக்க உள்ளனர். மேலும் தற்கொலை முயற்சி குறித்து செங்கல்பட்டு தாலுகா போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணை
மாணவியின் தற்கொலைக்கு ரேகிங்தான் காரணமா இல்லை வேறு ஏதேனும் காரணமா என விசாரித்து வருகிறார்கள். மேலும் ரேகிங் செய்வது குற்றம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து மாணவி கல்லூரி நிர்வாகத்தில் புகார் தெரிவித்தாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டது. தற்கொலை எண்ணம் வந்தால் உடனடியாக 104 எனும் உதவி எண்ணுக்கு அழையுங்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த எண்ணில் தொடர்பு கொள்வோருக்கு கவுன்சலிங் கொடுக்கப்படுகிறது. அவர்கள் தற்கொலை முடிவை தூக்கி எறிந்துவிடுவர்.
-
எங்களை எப்படியாவது காப்பாத்துங்க.. அமெரிக்கா - இந்தியாவிடம் கெஞ்சும் வங்கதேசம்.. ரஷ்யா உதவுமா? -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர்












Click it and Unblock the Notifications