சட்டம் ஒழுங்கு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி! நைசாக நழுவிய அமைச்சர் ஆனந்த்!
சென்னை: தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை பெரியதாக வெடித்திருக்கிறது. இதனை சரி செய்ய புதிய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் என்ன? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அமைச்சர் ஆனந்த் பதிலளிக்காமல், நழுவி சென்றிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாவில் பரவலாக ஷேராகி வருகிறது.
இதற்கு முன்னரும், திருவள்ளுவருக்கு காவி சாயம் பூசப்பட்டதாக எழுந்த விமர்சனம் குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலளிக்காமல் சென்றிருந்தார். இப்படி மீடியாக்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளிக்காமல் நழுவது ஏன் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

என்ன நடந்தது?
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உச்சத்தில் இருக்கிறது. கோவையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது, சென்னையில் மூதாடி பாலியல் வன்கொடுமை, தலைமை காவலரால் சிறுவன் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டது, இளம்பெண் கார் ஏற்றி கொலை என குற்றங்கள் தொடர்ந்து நடந்துக்கொண்டே இருக்கிறது. இதனை தடுக்க காவல்துறை உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர்.
அமைச்சர் மழுப்பல்
இப்படி இருக்கையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனையை சரி செய்ய அரசு என்ன நடவடிக்கை எடுக்க இருக்கிறது? என செய்தியாளர்கள் அமைச்சர் ஆனந்திடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்காமல், பக்கத்தில் இருந்த பெண்ணிடம், "யாருமா அது துளசியா .. நல்லா இருக்கியாமா .. வீட்ல எல்லாரும் நல்லா இருக்காங்களா.. தோ வரேன்" என்று பேசி நழுவியிருக்கிறார்.
அதேபோல ரேஷன் கடை, கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஆய்வு செய்த கூட்டுறவு துறை அமைச்சர் காந்திராஜிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அவரும் உரிய பதிலளிக்காமல் நழுவியுள்ளார்.
கூட்டுறவு துறை அமைச்சர் காந்திராஜ்
ஆய்வு பின்னர் மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் என்ன? கண்டுபிடிக்கப்பட்ட குறைபாடுகள் என்ன என்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். இதற்கு பதிலளித்த அமைச்சர் காந்திராஜ், முதலமைச்சர் இது குறித்து விளக்கமளிப்பார் என்று சிம்பிளாக முடித்துக்கொண்டார். எல்லாவற்றிற்கும் முதலமைச்சர் எனில், துறைக்கு அமைச்சர்கள் எதற்கு என்று செய்தியாளர்கள் கேட்க.. அமைச்சர் மழுப்பலாக பதிலளித்து நகர்ந்துவிட்டார்.
அமைச்சர் செங்கோட்டையன்
அதேபோல நேற்று அமைச்சர் செங்கோடையனிடம், வள்ளுவருக்கு காவி நிறம் பூசப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர். ஆனால் செங்கோட்டையன் பதிலளிக்காமல் நழுவி விட்டார். இப்படி செய்தியாளர்களுக்கு பதிலளிக்காமல் அமைச்சர்கள் நழுவுவது ஏன் என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பிருக்கின்றனர்.
-
டிடிவி தினகரன் பார்வை படாதா என பம்மியது மறந்து போச்சா? அமைச்சர் CTR நிர்மல்குமாருக்கு அமமுக பதிலடி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
திராவிடம் வீழ்ந்தது.. விஜய்யை சமாளிச்சிடலாம்! கழுகுப்பார்வை பார்த்த அமித் ஷா.. அமைதிக்கு காரணம்! -
எடப்பாடியை பார்க்க விஜய் டைம் கேட்கவில்லை.. ஆதவ் ஒரு சந்தர்ப்பவாதி! போட்டுத் தாக்கிய கேபி முனுசாமி! -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
மகள் பற்றி விஜய் சந்தோஷமாக பேசினாரு.. அவ்ளோ மகிழ்ச்சி அவருக்கு! சர்ச்சைகளுக்கு மத்தியில் நடிகை ஓபன் -
அன்னதானம் எங்க போடறீங்க.. வாட்டர் ஸ்பாட் எங்க.. அதிகாரிகளை கேள்விகளால் துளைத்த ரமேஷ்












Click it and Unblock the Notifications