எதிர்பாராத மழை.. முடங்கிய சாலைகள்.. கடும் டிராபிக்.. தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை
சென்னை: திடீரென பெய்த கனமழையால் தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video
நேற்று சென்னையில் திடீரென மதியம் 2 மணிக்கு பின் கனமழை பெய்ய தொடங்கியது. 10 மணி நேரம் விடமால் பெய்த கனமழையால் சென்னையின் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடானது.
எல்லா விதமான கணிப்புகளையும் மிஞ்சி நேற்று பிற்பகல் தொடங்கிய கனமழை விடாமல் பெய்து வந்தது. திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களிலும் கனமழை பெய்தது.
8 மணி நேர கனமழை.. போக்குவரத்து நெரிசல்.. நடுவழியில் நிற்கும் ஆம்புலன்ஸ்கள்..மொத்தமாக முடங்கிய சென்னை
மழை
காஞ்சிபுரம் அருகே இருக்கும் பல்வேறு பகுதிகள், ஈசிஆர் பகுதிகளிலும் விடாமல் மழை பெய்து வந்தது. பல இடங்களில் சென்னையில் 100 மிமீக்கும் அதிகமாக மழை பெய்தது. மயிலாப்பூர், எம்ஆர்சி நகர், நுங்கம்பாக்கம் போன்ற பகுதிகளில் கனமழை அளவு 200 மிமீக்கும் அதிகமாக பதிவானது.
சென்னை வெள்ளம்
சென்னையில் பெய்த இந்த மழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சைதாப்பேட்டை, நந்தம்பாக்கம், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூர், கோயம்பேடு, வடபழனி பகுதிகளில் லேசான மழையும் மழை, கோடம்பாக்கம், தி.நகர், நசரத்பேட்டை,மாங்காடு, மீனம்பாக்கம், கிண்டி ஆகிய பகுதிகளில் பெரும் வெள்ளம் ஏற்பட்டது. அதோடு கடுமையான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
போக்குவரத்து நெரிசல்
இந்த கடுமையான போக்குவரத்து நெரிசலால் ,சென்னையில் 3 கிலோ மீட்டர் தூரத்தை கார், பைக்கில் கடக்கவே 2-3 மணி நேரம் ஆனது குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் ஏற்பட்டது. இப்போதும் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது.
வெள்ளம்
இந்த நிலையில் போக்குவரத்து நெரிசல், தண்ணீர் தேங்கி உள்ள நிலை அனைத்தையும் காரணம் காட்டி தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று ஒருநாள் விடுமுறை அளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார்.