ஆகவே, புத்தகங்களில் மத்திய அரசு நீக்கப்படும்.. ஒன்றிய அரசு என அச்சிடப்படும்.. லியோனியின் "தீர்ப்பு"!
சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திண்டுக்கல் லியோனி, புத்தகங்களில் மத்திய அரசு என்ற வார்த்தை நீக்கப்பட்டு ஒன்றிய அரசு என அச்சிடப்படும் என்றார்.
Recommended Video
தமிழ்நாடு பாடநூல் நிறுவனம் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவராக திண்டுக்கல் லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த அதிமுக ஆட்சியில் இந்த பதவியில் முன்னாள் அமைச்சர் வளர்மதி இருந்தார்.
இந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டவுடன் அந்த பதவிக்கு பட்டிமன்ற பேச்சாளரும் நடுவருமான திண்டுக்கல் ஐ லியோனி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது நியமனத்திற்கு நன்றி கூற முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது அவரிடம் வாழ்த்து பெற்றார்.

கல்வியியல்
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் : தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழக தலைவராக வாய்ப்பளித்துள்ள முதல்வருக்கு நன்றி. எளிய மக்கள் கல்வியை சுமையாக கருதாமல் சாதாரண குழந்தைகள் விருப்பத்துடன் பாடங்களை படிக்க வேண்டும்.

தயார்
இதில் பல புதுமைகளை படைக்க தயாராக இருக்கிறேன். ஒன்றிய அரசு எனும் வார்த்தையை மக்கள் சிறப்பாக பயன்படுத்த துவங்கி விட்டனர். அடுத்து பருவ புத்தகங்கள் அச்சிடும் போதும் மத்திய அரசு என்ற சொல் நீக்கப்பட்டு ஒன்றிய அரசு என்று புத்தகங்களில் அச்சிடப்படும்.

ஒரு வாரம்
33 ஆண்டுகள் ஆசிரியர் பணியில் இருந்த எனக்கு முதல்வர் இந்த வாய்ப்பை அளித்துள்ளார். ஒருவாரத்துக்குள் பொறுப்பேற்றுக் கொள்வேன் என்றார் லியோனி. ஒன்றிய அரசு என கூறுவதை பாஜகவினர் கண்டனம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பிரச்சாரம்
அதிமுக தேர்தல் பிரச்சாரத்தில் வாஷிங் மெஷினை இலவசமாக கொடுப்போம் என சொன்னதற்கு திண்டுக்கல் லியோனி பெண்களை இழிவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அவருக்கு பதவி கொடுத்ததற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications