நல்ல செய்தி.. எல்ஐசியின் புதிய ஜீவன் சாந்தி திட்டத்தில் அசத்தல் அறிவிப்பு! ஓய்வூதியம் விகிதம் உயர்வு
சென்னை: எல்ஐசியின் புதிய ஜீவன் சாந்தி பாலிசியில் வருடாந்திர பென்ஷன் விகிதங்கள் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளன. மட்டுமல்லாது அதிக கொள்முதல் விலைக்கான ஊக்கத்தொகையும் உயர்த்தப்பட்டிருக்கிறது.
எல்ஐசி நாட்டின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சார்பில் அடிக்கடி சில ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டதுதான் 'ஜீவன் சாந்தி' பாலிசி. இந்த பாலிசியில் இணைவதற்கு குறைந்தபட்சம் 30 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 79 ஆகும். சுயமாக தொழில் செய்பவர்கள், சமூக பாதுகாப்பான வேலையில் இல்லாதவர்கள் ஆகியோருக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தற்போதைய சூழலில் நாடு முழுவதும் சமூக பாதுகாப்பான வேலை என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. எல்லோருக்கும் வேலை இருக்கும். ஆனால் அந்த வேலை நிச்சயமற்றதாக இருக்கும். யார் எப்போது வேலையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பது தெரியாது. இந்நிலையில், இந்த திட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்றே சொல்லாம். அதேபோல இந்த திட்டத்தில் இரண்டு பேரும் சேர்ந்து முதலீடு செய்யலாம்.
மாதத்திற்கு ரூ.1,000லிருந்து முதலீட்டு தொகை தொடங்குகிறது. குறைந்தபட்சம் வாடிக்கையாளர்கள் ரூ.1.5 லட்சம் பிரிமியம் தொகையை கட்டியிருக்க வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் கட்டலாம். அதேபோல நீங்கள் கட்டும் மொத்த தொகைக்கு ஏற்பவாறு உங்களுக்கு கிடைக்கும் பணமும் வேறுபடும். அதாவது நீங்கள் ரூ.1.5 லட்சம் கட்டுகிறீர்கள் எனில் உங்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கிடைக்கும். அதே நீங்கள் ரூ.10 லட்சம் கட்டுகிறீர்கள் எனில் உங்களுக்கு மாதம் ரூ.11,192 கிடைக்கும். இதே நீங்கள் இணையாக இந்த திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் எனில் மாதம் ரூ.10,576ஐ பெறாலம்.
ஆனால் இந்த தொகை அனைத்தும் நீங்கள் முதலீடு செய்யும் தொகையை பொறுத்து மாறுபடும். ஒய்வுக்கு பின்னர் உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த தொகை உங்களுக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். உயிருடன் இருக்கும் வரை உங்களுக்கு ஓய்வுவூதியமும், இறந்த பின்னர் இறப்புகான தொகை உங்கள் வாரிசுகளுக்கும் கிடைக்கும். இத்துடன் இந்த கணக்கு முடித்துக்கொள்ளப்படும். அதாவது பாலிசிதாரர் உயிரிழந்த பின்னரும் அவரது குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது. அதே போல இந்த முதலீட்டு தொகை மாதம் மாதமும் கட்டலாம் அல்லது 3,6 மற்றும் 12 மாதத்திற்கு ஒரு முறை என்றும் கட்டலாம்.
இந்த திட்டத்தில் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், இந்த திட்டத்தில் லோன் வேண்டும் எனில் பெற்றுக்கொள்ளலாம். அதாவது திட்டத்தில் பணம் செலுத்த தொடங்கிய மூன்று மாதங்களில் இந்த லோனை பெற்றுக்கொள்ளலாம். இப்படி வழங்கப்படும் லோன் என்பது ஒட்டுமொத்த ஆண்டு தொகையில் 50%க்கு மிகாமல் இருக்கும். அதேபோல முதலீடுக்கு வரி பிடித்தம் இருக்கும். எனவே இது குறித்து விரிவான விவரங்களை கேட்டு பெற அருகில் உள்ள எல்ஐசி அலுவலகத்தையோ அல்லது எல்ஐசி முகவரையோ அணுக வேண்டும் என்று எல்ஐசி தெரிவித்திருக்கிறது.
-
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
ஆரம்பிக்கும் மூன்றாம் உலக போர்.. வெளியே வந்த டூம்ஸ்டே மீன்.. அலறும் உலக நாடுகள் -
கூட்டுறவு வங்கி தங்க நகை கடன் + மகளிர் உரிமை தொகை! கனிமொழி பிரம்மாஸ்திரம்! ஸ்டாலின் முக்கிய முடிவு -
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங்












Click it and Unblock the Notifications