Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நல்ல செய்தி.. எல்ஐசியின் புதிய ஜீவன் சாந்தி திட்டத்தில் அசத்தல் அறிவிப்பு! ஓய்வூதியம் விகிதம் உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்ஐசியின் புதிய ஜீவன் சாந்தி பாலிசியில் வருடாந்திர பென்ஷன் விகிதங்கள் உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளன. மட்டுமல்லாது அதிக கொள்முதல் விலைக்கான ஊக்கத்தொகையும் உயர்த்தப்பட்டிருக்கிறது.

எல்ஐசி நாட்டின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சார்பில் அடிக்கடி சில ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் அறிவிக்கப்பட்டதுதான் 'ஜீவன் சாந்தி' பாலிசி. இந்த பாலிசியில் இணைவதற்கு குறைந்தபட்சம் 30 வயது நிரம்பி இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பு 79 ஆகும். சுயமாக தொழில் செய்பவர்கள், சமூக பாதுகாப்பான வேலையில் இல்லாதவர்கள் ஆகியோருக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

LICs New Jeevan Shanti Scheme Pension Rates Increase

தற்போதைய சூழலில் நாடு முழுவதும் சமூக பாதுகாப்பான வேலை என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக மாறியிருக்கிறது. எல்லோருக்கும் வேலை இருக்கும். ஆனால் அந்த வேலை நிச்சயமற்றதாக இருக்கும். யார் எப்போது வேலையிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பது தெரியாது. இந்நிலையில், இந்த திட்டம் அனைவருக்கும் பொருந்தும் என்றே சொல்லாம். அதேபோல இந்த திட்டத்தில் இரண்டு பேரும் சேர்ந்து முதலீடு செய்யலாம்.

மாதத்திற்கு ரூ.1,000லிருந்து முதலீட்டு தொகை தொடங்குகிறது. குறைந்தபட்சம் வாடிக்கையாளர்கள் ரூ.1.5 லட்சம் பிரிமியம் தொகையை கட்டியிருக்க வேண்டும். அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் கட்டலாம். அதேபோல நீங்கள் கட்டும் மொத்த தொகைக்கு ஏற்பவாறு உங்களுக்கு கிடைக்கும் பணமும் வேறுபடும். அதாவது நீங்கள் ரூ.1.5 லட்சம் கட்டுகிறீர்கள் எனில் உங்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் கிடைக்கும். அதே நீங்கள் ரூ.10 லட்சம் கட்டுகிறீர்கள் எனில் உங்களுக்கு மாதம் ரூ.11,192 கிடைக்கும். இதே நீங்கள் இணையாக இந்த திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள் எனில் மாதம் ரூ.10,576ஐ பெறாலம்.

ஆனால் இந்த தொகை அனைத்தும் நீங்கள் முதலீடு செய்யும் தொகையை பொறுத்து மாறுபடும். ஒய்வுக்கு பின்னர் உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த தொகை உங்களுக்கு கிடைத்துக்கொண்டே இருக்கும். உயிருடன் இருக்கும் வரை உங்களுக்கு ஓய்வுவூதியமும், இறந்த பின்னர் இறப்புகான தொகை உங்கள் வாரிசுகளுக்கும் கிடைக்கும். இத்துடன் இந்த கணக்கு முடித்துக்கொள்ளப்படும். அதாவது பாலிசிதாரர் உயிரிழந்த பின்னரும் அவரது குடும்பத்தினருக்கு ஓய்வூதியம் வழங்கப்படமாட்டாது. அதே போல இந்த முதலீட்டு தொகை மாதம் மாதமும் கட்டலாம் அல்லது 3,6 மற்றும் 12 மாதத்திற்கு ஒரு முறை என்றும் கட்டலாம்.

இந்த திட்டத்தில் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், இந்த திட்டத்தில் லோன் வேண்டும் எனில் பெற்றுக்கொள்ளலாம். அதாவது திட்டத்தில் பணம் செலுத்த தொடங்கிய மூன்று மாதங்களில் இந்த லோனை பெற்றுக்கொள்ளலாம். இப்படி வழங்கப்படும் லோன் என்பது ஒட்டுமொத்த ஆண்டு தொகையில் 50%க்கு மிகாமல் இருக்கும். அதேபோல முதலீடுக்கு வரி பிடித்தம் இருக்கும். எனவே இது குறித்து விரிவான விவரங்களை கேட்டு பெற அருகில் உள்ள எல்ஐசி அலுவலகத்தையோ அல்லது எல்ஐசி முகவரையோ அணுக வேண்டும் என்று எல்ஐசி தெரிவித்திருக்கிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+